districts

img

ஓசோன் படலத்தை காப்பது ஒவ்வொருவரின் கடமை உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அறிவுறுத்தல்

திருப்பூர், செப்.16- உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு  கலைஞர் கருணாநிதி பேருந்து நிலை யத்தில் திங்களன்று திருப்பூர் சிக் கண்ணா கலை மற்றும் அறிவியல் கல் லூரி மாணவ, மாணவிகள் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு  திருப்பூர் கலைஞர் கருணாநிதி பேருந்து  நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம் திருப்பூர் வடக்கு மற்றும்  சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 இணைந்து திங்களன்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு  கட்டுப்பாட்டு திருப்பூர் வடக்கு உதவி சுற் றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்டு பேசு கையில், ஓசோன் படலம் சூரியனிலி ருந்து வரும் அதிக வெப்பத்தை  குறைத்து பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றுகிறது. உயிரினங்களை சார்ந்து வாழும் மனி தனும் காப்பாற்றப்படுகிறான். ஆகை யால் ஓசோனை காப்பது ஒவ்வொரு வரின் கடமையாகும். குப்பைகளை, பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது. மாணவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார். இதில், தெற்கு காவல் ஆய்வாளர் (குற்றப்பிரிவு) உத யகுமார் வாழ்த்துரை  வழங்கினார்.  பிறகு மாணவ செயலர்கள் மது  கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, திவாகர்,  ரேவதி, நவீன்குமார், கோகுல் ஆகி யோர் தலைமையில் பருவநிலை பாதிப்பு நடவடிக்கையை துரிதப்படுத் துதல் என்ற இந்த ஆண்டு மையக்க ருத்தினை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டது. பிறகு பொதுமக் களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும், மஞ்சப்பை கொடுத்தும் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில், அலகு 2 ஒருங் கிணைப்பாளர் மோகன் குமார் முன் னிலை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாடு களை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற் றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியா ளர் செந்தில்குமார் செய்திருந்தார்கள்.