districts

img

கோவையில் அதிகரிக்கும் ஐ.டி நிறுவனங்கள்...!

கோவையில் கடந்த ஓராண் டில் 40க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் துவங்கப்பட் டுள்ளது கோவை மக்களை  மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டியான கோவை யில் பல்வேறு உட்கட்டமைப்பு கள் மேம்படுத்தப்பட்டு வருகின் றன. இந்த உட்கட்டமைப்புகளை கடந்து கோவை என்றாலே அதன் சுவையான நீரும், அருமையான காலநிலையும், அன்பான மக்க ளுமே நினைவுக்கு வருவார்கள். இதனால் கோவை என்றாலே அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். கோவை மாவட்டமா னது விவசாயம் மட்டுமல்லாது, உற்பத்தி தொழிற்சாலைகள்  நிறைந்த மாவட்டமாக உள்ளது. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மோட்டார் பம்புகள், கிரைண் டர்கள், இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறு வனங்கள் செயல்பட்டு வருகின் றன. தமிழகத்தின் தொழில் தலை நகராக விளங்கி வரும் கோவை தற்போது தொழில்நுட்ப நகராக வும் உருவெடுத்து வருகிறது. கொரோனா அச்சுறுத்த லுக்கு பிறகு கோவை மாவட்டத் தில் தொழில்நுட்ப மற்றும் மென் பொருள் நிறுவனங்கள் கால் பதிக்கத் துவங்கியிருப்பதாக கூறு கின்றனர் துறை வல்லுநர்கள். இதன் மூலமாகக் கோவை இளை ஞர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பை பெறுவார்கள். வேலை வாய்ப்பு மட்டுமல்லாது, கோவை யின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச் சிக்கும் இத்தகைய நிறுவனங்கள் உதவும் என்கின்றனர் துறை வல்லுநர்கள்.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த மனித வள மேம்பாட்டுத் துறை ஆலோசகர் கிஷோர் கூறு கையில், இயற்கை சீற்றங்கள், வாழ்வதற்கான செலவு, சுற்றுச் சூழல், குடிநீர் உள்ளிட்ட வசதி களை அடிப்படையாக கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை கோவையில் நிறுவி வருகின்றனர். இது கோவையில் அடுத்த 5 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கோவையில் ஏராளமான கல்லூரி கள் உள்ளன. இதனால் தங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற பணியாளர் கள் துரிதமாக கிடைப்பார்கள் என்று நிறுவனங்கள் நினைக்கின் றன. கோவையை மையமாகக் கொண்டு இத்தகைய நிறுவனங் கள் அமையும் போது கோவை மட்டுமல்லாது நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயனடைவார் கள், என்றனர். இதுகுறித்து பன்னாட்டு நிறு வனத்தின் முதன்மை செயல் அதி காரி நிர்மல்குமார் கூறுகையில், மற்ற ஊர்களைக் காட்டிலும் கோவை மக்கள் தினமும் புத்து ணர்ச்சியுடன் பணிபுரிவதை நான்  பார்த்திருக்கிறேன். அது எங்கள் பணியில் வெளிப்படுகிறது. வெளி நாட்டிலிருந்து வரும் எங்களது வாடிக்கையாளர்கள் கோவை யில் தங்குவதையே விரும்பு கிறார்கள். எங்கள் நிறுவனத்தின் 75 சதவிகித வளர்ச்சி கோவை  மாவட்டத்தை மையமாக வைத்தே இருக்கும் என்று நினைக்கிறேன், என்றார்.

-கே.எஸ்.எம்

;