districts

img

தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா வழங்கல்

நாமக்கல், ஜூலை 10– எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பேரவை கூட்டத்தில் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா ஒப்படைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு தீர்மானங்கள்  குறித் சிறப்பு பேரவை நடைபெற்றது.  ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வி. தேவராஜ் வரவேற்புரையாற்றினார். இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலாளருமான  எம்.பாண்டி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.  முன்னதாக பேரவையில் எலச்சிபாளையம் ஒன்றிய குழுவின் சார்பில் 25. சந்தாக்கள், பிஎஸ்என்எல் அரங்கம் சார்பில் 10 சந்தாக்கள் என 35 தீக்கதிர் நாளிதழுக்கான சந்தாக்கள் ஒப்படைக்கப்பட்டது. இதில் சிபிஎம் நாமக்கல் மாவட்டசெயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.தங்கராஜ், ஜி.பழனியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ் நன்றி கூறினார்.