சென்னை, ஏப்.7- சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்ததாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப் படும் என்று தேர்தல் வாக்குறுதி யாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்துள்ளார்.
“விளையாட்டு மற்றும் கிரிக் கெட் ரசிகன் என்ற முறையில் திமுக தேர்தல் அறிக்கையில் கூடுதலாக ஒரு வாக்குறுதியை சேர்த்துக் கொள்கிறேன். விளையாட்டை விரும்பும் கோவை மக்களுடன் இணைந்து கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மேற்கோள்காட்டிய படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்தபடியாக கோவையில் அமைய உள்ள மைதானம் தமிழ் நாட்டின் 2-வது சர்வதேச மைதா னமாக அமையும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.