நாமக்கல், ஆக.8- விபத்தில் கணவனை இழந்த பெண் ணுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்கா மல் இழுத்தடித்த ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்க உள்ளதாக அதிரடி காட்டிய நாமக் கல் நுகர்வோர் நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து பணிந்து பிரிமியத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே வசிப்பவர் முருகன். இவருடைய மனைவி செல்வி. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், முருகன் இரு சக்கர வாக னத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார். முருகன் இரு சக்கர வாக னத்திற்கு இன்சூரன்ஸ் மற்றும் தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட் சத்திற்கு, ரிலையன்ஸ் (சேலம் கிளை) தனி யார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பிரிமியம் செலுத்தியிருந்தார். இதனையடுத்து, கணவரின் இறப்பிற்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்குமாறு செல்வி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண் ணப்பம் செய்துள்ளார். இன்சூரன்ஸ் பணத்தை நிறுவனம் வழங்காததால் இன்சூரன்ஸ் நிறுவ னம் மீது கடந்த 2022 ஜூன் மாதத்தில் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ், உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் கடந்த மார்ச் மாதத் தில் தீர்ப்பு வழங்கினர். இன்சூரன்ஸ் நிறுவ னம் இறந்தவரின் மனைவிக்கு நான்கு வார காலத்துக்குள் இன்சூரன்ஸ் தொகை ரூ.15 லட்சத்தையும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச் சலுக்கு இழப்பீடாக ரூ.ஒரு லட்சத்தையும் விபத்து நடந்த நாளிலிருந்து ஆண்டொன் றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற தீர்ப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பின்படி, காப் பீட்டுத் தொகையையும், இழப்பீட்டுத் தொகையையும் இன்சூரன்ஸ் நிறுவனம் உரிய காலத்துக்குள் வழங்கவில்லை. இத னால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வி, மீண்டும் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். இதில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலா ளரை கைது செய்து தண்டனை வழங்க வேண் டும் என ஜூன் 2024இல் முறையிட்டார். இந்த வழக்குக் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது தீர்ப்புப்படி பணத்தை கணவனை இழந்த பெண்மணிக்கு வழங்கவிட்டால் இன் சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் எச் சரிக்கை செய்தது. இதனையடுத்து, தீர்ப்பின்படி வழங்க வேண்டிய இன்சூரன்ஸ் தொகை ரூ.15 லட் சம், சேவை குறைபாட்டிற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.ஒரு லட்சம் மற்றும் இந்த ரூ.16 லட் சத்திற்கு செல்வியின் கணவன் விபத்தில் இறந்த நாளில் இருந்து தற்போது வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி ஆகியவற் றிற்கான வரைவோலையை இன்சூரன்ஸ் நிறுவனம், வியாழனன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதனை, இன்சூரன்ஸ் நிறு வனத்தால் பாதிக்கப்பட்ட செல்விக்கு இன்சூ ரன்ஸ் நிறுவனம் சார்பில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ.ராம ராஜ் இழப்பீடு தொகையாக ரூ.22லட்சத்து 76 ஆயிரத்து 226 க்கான வரைவோலையை வழங்கினார். அப்போது நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் ஆர்.ரமோலா, என்.லட்சும ணன், செல்வியின் வழக்கறிஞர் கே.ராஜூ, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் பி. ராஜவேலு ஆகியோர் உடனிருந்தனர்.