உதகை, மே 30- நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிக ளில் இயக்கப்படும் பேருந்துகள் பாதுகாப்பு குறித்த ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத் தில் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் நடைப்பெற்ற ஆய்வில் மாவட்டத்தில் உள்ள 140 பள்ளி மினி பேருந்துகள், பெரிய பேருந்துகளில் வியாழனன்று 110 பள்ளி பேருந்து கள் ஆய்வுக்குட்ப்படுத்தப்பட்டன. இதில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, வட்டார போக்குவ ரத்து அலுவலர் தியாகராஜன் ஆகியோர் பேருந்துகள் பாது காப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பேருந்து இருக்கை, அவசர கால வழி, முதலுதவிப்பெட்டி, தீயணைப்பு சிலிண்டர், வேக கட்டுப்பாட்டு கருவி உட்பட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் செய்யப் பட்டது. இதில், முறையாக பராமரிக்கப்படாத பள்ளி பேருந்து கள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டுமென அதிகாரிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, பள்ளி பேருந்துகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பாணை வைத்து தீயை அணைப்பது குறித்த செயல்முறை விளக்கத்தை தீயணைப்பு துறையினர் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு பயிற்சியளித்தனர்.