தாராபுரம், மே 29 - தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை யில் ஈடுபட்டனர். நடமாடும் உணவு பாதுகாப்புதுறை ஆய்வகம் மூலம் பொருட்கள் உடனுக்குடன் ஆய்வுக்குட் படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் விஜயலலிதாம்பிகை உத்தரவின் பேரில், தாராபுரம் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் சிரஞ்சீவி மற்றும் நடமாடும் உணவு பாதுகாப்பு துறை லேப் டெக்னீசியன்கள் ஆய்வு நடத்தினர். தாராபுரம் பெரியகடை வீதி, சின்ன கடை வீதி, பொள்ளாச்சி ரோடு, பூக்கடைக்கார்னர், என்.என் பேட்டை வீதி பகுதிகளில் உள்ள மளிகை கடை, பேக்கரி, தள்ளுவண்டி கடைகள் கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில் உணவு சேம்பிள்களை எடுத்தனர். சமையல் எண்ணை, குளிர்பானங்கள், பருப்பு உள்பட பல்வேறு உணவுப்பொருட்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு நடமாடும் சோதனை கூடத்தில் சோத னைக்கு உட்படுத்தப்பட்டது. லேபிள் சோதனை செய்ததன் அடிப்படையில் சேம்பிள் எடுத்தவர்களின் பொருட்கள் தரம் குறைவாக இருந்தால் அந்த கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ,தரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை உணவு பாதுகாப்பு துறை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.