districts

img

தருமபுரி ரயில் நிலையத்தின் நடைமேடை மேம்பாலத்தை விரிவுபடுத்த வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.9- தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளங்களை கடக்கும்போது ஏற்படும் விபத்து களை தடுக்க, நடைமேடையி லுள்ள மேம்பாலத்தை விரிவுப டுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் - பெங்களூரு வழித்தடத் தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக தருமபுரி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வழி யாக தினமும் 40 ரயில்கள் சென்று  வருகின்றன. இந்த ரயில் நிலையத் திற்கு அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஆயிரக்கணக்கான பயணி கள் வந்து செல்கின்றனர். ரயில்  நிலையத்தின் மேற்கு பகுதியில் பிடமனேரி, நெல்லி நகர் உள்ளிட்ட  பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி யில் வசிக்கும் பலர் தங்கள் குடியி ருப்புகளுக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளங் களை கடந்து ரயில் நிலையத்திற் கும், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகு திகளுக்கும் சென்று வருகின்றனர். ரயில் நிலையத்தில் தற்போதுள்ள நடைமேம்பாலம் மூலம் 1 ஆவது நடைமேடை முதல் 3 ஆவது நடை மேடை வரை பயணிகள், பொது மக்கள் சென்று வருகின்றனர். கூடுத லாக உள்ள 2 தண்டவாளங்களில் சரக்கு ரயில்கள் வந்து சரக்குகளை  இறங்கி செல்கின்றன. இந்த 2 தண் டவாளங்கள் உள்ள பகுதிக்கும் நடைமேம்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும், என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரு கிறது. தருமபுரி ரயில் நிலையத்தில் உள்ள 4 ஆவது மற்றும் 5 ஆவது தண்டவாளத்தில் சரக்கு ரயில்கள் நின்று சரக்குகளை இறக்கும் போது, மேற்கு பகுதியில் உள்ள குடி யிருப்புகளைச் சேர்ந்தவர்கள் இப் பகுதியை கடந்து ரயில் நிலையத் திற்கும், வேறு பகுதிகளுக்கும் சென்று வர முடியாத நிலை ஏற்படு கிறது. இதனால் பலர் அபாயகர மான முறையில் நிற்கும் சரக்கு ரயி லில் அடிப்பகுதியில் நுழைந்து தண் டவாளங்களை கடந்து வருகின்ற னர். எனவே இப்பகுதியில் பயணி கள், பொதுமக்கள் அபாயகரமான முறையில் தண்டவாளங்களை கடப் பதை தடுக்க நடை மேம்பாலத்தை 5 ஆவது தண்டவாளம் அமைந் துள்ள பகுதி வரை விரிவுபடுத்த ரயில்வே நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.