தருமபுரி, செப்.27- தருமபுரி, ஒட்டப்பட்டியில் கட்டி முடிக்கப்பட்ட அம்பேத் கர் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள் ளனர். தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களிலி ருந்தும் ஏரளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்ற னர். இக்கல்லூரி மாணவா்கள் தங்கிப் பயிலுவதற்கு ஏதுவாக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தருமபுரி, ஒட்டப்பட்டி யில் அம்பேத்கர் கல்லூரி மாணவா்கள் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதி பழுதடைந்ததால், அதனை இடித்து விட்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ.322.80 லட்சம் மதிப் பீட்டில் புதிதாக விடுதி கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற் போது பணிகள் நிறைவடைந்து விடுதியானது தயார் நிலை யில் உள்ளது. இதனிடையே பழுதடைந்த விடுதியை இடித்த தால், தற்போதுள்ள விடுதி வாடகை கட்டடத்திற்கு அரசு சார் பில் மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் மாணவர்கள் சுமார் 440 பேர் தங்கியுள்ளனர். மாணவர்களுக்கு போதுமான கழிவறை, தூய்மையான குடிநீர் வசதி இல்லை. மழைக்காலங்களில் விடுதியின் மேற்கூரை பழுதால் தங்கும் அறையில் மழைநீர் ஒழுகுகிறது. எனவே, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி புதிதாக கட்டப்பட்ட விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.