districts

ஊத்துக்குளி, அவிநாசி குளம், குட்டைகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

திருப்பூர், ஏப்.21 – அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் குழாய்  மூலம் நீர் நிரப்ப இருக்கும் ஊத்துக்குளி, அவி நாசி வட்டார குளம், குட்டைகளில் சீமைக் கரு வேல மரங்கள் மற்றும் முட்புதர்களை அகற்ற  வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் கோட்ட விவசாயிகள் குறை தீர்க்  கூட்டம் வெள்ளியன்று சார் ஆட்சியர் ஸ்ருதன்  ஜெய் நாராயணன் தலைமையில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட செயலாளர் ஆர்.குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 60 ஆண்டு கால  தொடர் போராட்டத்தின் பலனாக தற்போது  ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங் களைச் சேர்ந்த குளம், குட்டைகளில், குழாய் மூலமாக தண்ணீர் அனுப்பி அவிநாசி - அத் திக்கடவு திட்ட சோதனையோட்டம் நடை பெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில்  இத்திட்டத்திற்குட்பட்ட ஊத்துக்குளி, அவி நாசி வட்டாரத்தில் குளம், குட்டைகளில் சீமைக் கருவேல மரங்களும், முட்புதர்களும் நிரம்பிக் காட்சியளிக்கின்றன. இதனால் இத் திட்டத்தின்படி நீர் திறக்கப்படும்போது இந்த  நீர் விவசாயத்திற்கு பயன்படாமல் விரயமா கும் வாய்ப்புள்ளது.

எனவே இந்த குளம், குட் டைகளில் முட்புதர்களை அகற்ற உரிய நடவ டக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.குமார்  வலியுறுத்தி உள்ளார்.  பல்லடம் வட்டாரத்தில் மனைவரி தோரா யப் பட்டா, எச்எஸ்டி பட்டா பெற்று குடியி ருந்து வரும் பொது மக்களுக்கு, பல்லடம்  சார் பதிவாளர் அலுவலகத்தில், நத்தம் நிலங் களுக்கு வழிகாட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப் படவில்லை என்றும், அரசு நிலம் என்பதால்  பத்திரப் பதிவு செய்ய முடியாது என்றும்  தெரிவித்து வருகிறார்கள். திருப்பூர் மாவட் டத்தில் மற்ற பத்திரப் பதிவு அலுவலகங் களிலும் இதுபோல் சொல்லப்படுகிறது. வரு வாய்த் துறையிலும், நத்தம் நிலங்களில் வழங் கப்படும் எச்எஸ்டி பட்டாக்கள் முறையாக கிராம ஆவணங்களில் தாக்கல் செய்து பராம ரிப்பதில்லை. எனவே ஒட்டுமொத்த நத்தம் அடங்கலில் உள்ள நிலங்கள் அரசு நிலம் என்று வழிகாட்டு மதிப்பு நிர்ணயம் செய்வ தில்லை. அரசினால் பட்டா வழங்கப்பட்ட இனங்களைப் பொறுத்து உடனடியாக நில மதிப்பு நிர்ணயம் செய்து பத்திரப்பதிவு செய் திட ஆவண செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு  விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செய லாளர் ஆர்.குமார் கேட்டுக் கொண்டிருக்கி றார். புஞ்சை தளவாய்பாளையம் கிராமத்தில்  கடந்தாண்டு தேசிய ஊரக வேலை உறுதித்  திட்டத்தில் கோவில் தோட்டம் செல்லும் ஓடை யில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் இந்த  அணை நிரம்புவதற்கு முன்பாகவே ஓடை யின் வலதுகரை வழியாக தண்ணீர் வெளி யேறிச் செல்கிறது. அப்போதே இதை சரி  செய்யும்படி ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்கப் பட்டது. தற்போது ஓடையில் தண்ணீர் வற்றி விட்டது. அடுத்து அவிநாசி - அத்திக்கடவு திட் டத்தில் தண்ணீர் நிரப்ப இருப்பதாலும், மழைக்காலம் வர இருப்பதாலும் தற்போது தடுப்பணையின் வலதுகரையை உயர்த்தி கட்டி, முழுமையாக நீர் நிரப்ப ஏற்பாடு செய்யு மாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஊத்துக் குளி தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஊத்துக்குளி வட்டம், புஞ்சை தளவாய் பாளையத்தில் பூளைக்காடு பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தில், இயல் பான வழித்தடத்தை மாற்றி சிறு விவசாயி யான ஆர்.ராமசாமியின் பூமியில் 3 உயர்  மின் கோபுரங்கள் அமைக்க மின் தொடர மைப்புக் கழக தலைமைப் பொறியாளர் அனு மதி அளித்துள்ளார். இதன்மூலம் 28 ஏக்கர்  கொண்ட பெரும் நிலப்பரப்புக்கு சொந்தக்கா ரரைக் காப்பாற்றியுள்ளார்.

எனவே சார் ஆட்சி யர் நேரில் ஆய்வு செய்து நீதி வழங்குமாறு  ஊத்துக்குளி செல்லிபாளையம் கரைக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆர்.ராமசாமி  கேட்டுக் கொண்டிருக்கிறார். திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட  பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம் பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற் குப்பதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஆகிய பத்து ஊராட்சிகளில் உள்ள குளம், குட் டைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்ல  அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு  விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய  செயலாளர் எஸ்.அப்புசாமி கேட்டுக் கொண் டார். குறிப்பாக, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் இப்பகுதி குளம், குட்டைகளில் நீர்  நிரப்ப இருப்பதால் அங்கு படிந்துள்ள வண் டல் மண்ணை விவசாய பயன்பாட்டுக்கு எடுத் துச் செல்லவும், குளம், குட்டைகளை ஆழப்ப டுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இப்பணிகளை வருவாய் மற்றும் ஊரக  வளர்ச்சித் துறை அலுவலர்கள் கண்கா ணித்து, இடைத்தரகர்கள், வியாபாரிகள் வண்டல் மண் எடுத்து விற்பனை செய்யா மல் விவசாயிகள் மட்டும் முறையாக பயன டைவதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்  என்றும் எஸ்.அப்புசாமி கேட்டுக் கொண்டி ருக்கிறார்.