உடுமலை, நவ. 11 – ஒரு அடி ஆழத்திற்கு மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு ஆணையையே முழுங்கடிக்கும் அளவிற்கு மண் கடத்தல் உடுமலையில் நடைபெறுகிறது. கண்டும் காணதாதது போல அதிகாரிகளின் செயல் பாடுகள் உள்ளதால் சூழலியலுக்கு பெரும் கேடு ஏற்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நூற்றுக் கணக்கான குளம், குட்டைகள் உள்ளன. நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக விளங் கும் இக்குளங்களுக்கு, பருவ மழை காலத் தில் மழைநீர் கிடைக்கிறது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவ சாயம் தடையின்றி நடைபெறுகிறது. மேலும், குடிநீர் தேவையும் பூர்த்தியா கின்றது. இந்நிலையில், உடுமலை பகுதியில், சட்ட விரோதமாக குளம், குட்டைகளில் மற்றும் தனியார் நிலங்களில் குறிப்பிட்ட அள விற்கு மேல் பல அடி ஆழத்திற்கு நாள்தோ றும் நூற்றுக்கணக்கான லோடு மண் விதி களைளை மீறி எடுக்கப்பட்டு வருகிறது. அரசு, மற்றும் தனியார் நிலங்களில் மண் அள்ள, கனிம வளத்துறை, வருவாய்த்துறையில் முறைப்படி அனுமதி பெற்று உரிய கட்ட ணம் செலுத்தி மண் எடுக்க வேண்டும். அதி லும், குறிப்பிட்ட அளவு ஆழம் மட்டுமே மண் எடுக்க வேண்டும் என்கிற விதி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை(நகாய்) சார்பில் நான்கு வழிச்சாலை பணிகள் உடுமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதற்காக,அரசு சார்பில், குறைந்த கால அனுமதியில், ஒரு மீட்டர் ஆழம் மட்டுமே மண் எடுக்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உடுமலை ஒன்றியம் தளி பேரூராட்சிக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அக்கிலம்மார் குட்டையில், கனிம வள விதிகளை மீறி பல மீட்டர் ஆழத்தில் , மண் கொள்ளை நடந்து வருகிறது. இதுகுறித்து, வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரும் கண்டு கொள்வ தில்லை. இது சூழலியல் ஆர்வலர்களை கவலை கொள்ளச்செய்துள்ளது. இதுகுறித்துஅவர்கள் கூறுகையில், உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மண் வெட்டி எடுக்கப்படுகிறது. இவையனைத்தும்அதிகாரிகளின் ஆசி யோடுதான் நடைபெறுகிறது. நமது முன் னோர்கள் மழை நீரை சேமிக்க திட்டமிட்டு குளம்,குட்டை,ஏரிகளை அமைத்து தந் துள்ளனர். இவைகளால்தான் எவ்வித தடங்கலுமின்றி விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இங்குள்ள குளம், குட்டைகள்,தனியார் நிலங்களில் பல அடி ஆழத்திற்கு மண் வெட்டி எடுத்து கடத்தப்படுகிறது. இதனால், எதிர்காலத்தில், சூழலியலுக்கு பெரும்கேடு ஏற்படும். உடனடியாக அரசு தலையிட வேண்டும், என்றனர்.
இதைப்போலவே, மண் எடுத்துச் செல் லும் லாரிகளில் எவ்வித பாதுகாப்பு வசதியும் இல்லை. இங்குள்ள சாலைகளில் அதிவேக மாக லாரிகள் வருவதால் சாலைகளில் மண் சிதறி விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இரவில் அதிவேகமாக இயக்கும் டிப்பர் லாரி களால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக போடிபட்டி, கொங்கலக் குறிச்சி, பள்ளபாளையம் உள்ளிட்ட பல இடங் களில் மண் குவியல்கள் சாலையில் சிதறி உள் ளதால் புழுதி கிளம்பி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அருகிலுள்ள குடியி ருப்புவாசிகள் பாதிப்புள்ளாகி வருகின்றனர். இந்த லாரிகளில் அதிக அளவு மண் எடுத்து வருவதால் கிராமத்து இணைப்பு சாலைகள் பல இடங்களில் சேதமடைந்துள் ளது. இதனால் கிராமப்புறங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட இணைப்பு சாலைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. மண் கொள்ளையை தடுக்க வேண்டிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கிராம இணைப்புச் சாலைகளை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுவதுடன், சுற்றுப் பகுதி விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு, நேரில் ஆய்வு செய்து கனிமவளக் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.