districts

img

உயிலட்டி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு

உதகை, ஜூன் 5- உதகையில் உள்ள உயி லட்டி நீர்வீழ்ச்சியில் தண் ணீர் வரத்து அதிகரித்துள் ளால், அதனை காண சுற் றுலா பயணிகள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ள னர். நீலகிரி மாவட்டம், கோத் தகிரியிலிருந்து மசக்கல் செல்லும் வழியில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையின் காரண மாக நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள் ளது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் அதிகப் படியான விவசாய நிலங்கள் உள்ளன. மேலும், இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீரின் மூலம் மசக்கல், கூக்கலதெறை பகுதி விவசாயிகள், கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, சைனீஸ் காய்கறிகள் எனப் பல தரப்பட்ட காய்கறிகளை விளைவித்து வரு கின்றனர். இந்நிலையில், விடுமுறை நாட் கள் என்பதாலும், அனைத்து சுற்றுலா மையங் களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து  செல்வதாலும் இந்த நீர்வீழ்ச்சிக்கு அதிகமா னோர் வந்து செல்கின்றனர்.