தருமபுரி, ஜூன் 30- கர்நாடகா அணைகளிலிருந்து தண் ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு 1500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித் துள்ளது. கர்நாடகா அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிபடி யாக சரிந்து வருகிறது. இதனால் வழக்க மாக நடப்பாண்டு ஜூன் 12 ஆம் தேதி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்க ளின் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணை களுக்கு நீர்வரத்தும் தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. குடகு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் ஞாயிறன்று காலை நிலவரப்படி 94.40 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையில் இருந்து 507 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து 9,179 கனஅடி யாக உள்ளது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியாகும். இந்த அணையிலிருந்து ஞாயிறன்று விநா டிக்கு 1,250 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேகதாது வழியாக கர்நாடகா - தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவிற்கு வருகிறது. இந்நி லையில், சனியன்று 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து, ஞாயிறன்று 1500 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக் கல்லிலுள்ள மெயின் அருவி, ஐந்த ருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகி றது.