districts

மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் சிறுகுறு தொழிற்கூட்டமைப்பு வலியுறுத்தல்

கோவை, ஜூன் 14- மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி சிறுகுறு தொழில்கள் தடை யின்றி இயங்குவதை ஒன்றிய, மாநில அரசு கள் உறுதிப்படுத்த வேண்டும் என தொழிற் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர்கள் சங்கத்தின் நிர்வா கிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் மாவட்ட  தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடை பெற்றது. இதில், தமிழக மின்சார வாரியத்தில்  உயர்த்தப்படும் கட்டணத்தினால், குறு, சிறு  தொழில்கள் பாதிக்கப்பட்டு வருவதால் அவற்றை கைவிட வேண்டும். ஆண்டுக்கு  ஒரு முறை உயர்த்தப்படும் மின் கட்டண உயர் வால் குறு, சிறு தொழில் பாதிக்கப்படுகிறது. இன்னும் 2 அரை ஆண்டுக்கு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். சிறுகுறு தொழில்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். குறு, சிறு தொழில்  நிறுவனங்கள் இயந்திரங்கள் 15 சதவீகித மானியத்தை இரண்டரை ஆண்டுகளாக மத் திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதை  திரும்ப பெற வேண்டும். மேலும், மானி யத்தை 25 சதவீகிதமாக உயர்த்தி தரவேண் டும்.

கடந்த ஏழு ஆண்டுகளாக மூலப்பொருட் களின் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருப்ப தால் குறு, சிறு நிறுவனங்கள் பாதிக்கப்பட் டது. இதனை முறைப்படுத்த வேண்டும். ஒன் றிய அரசு வங்கியில் தொழில் முனைவோர் கள் வாங்கும் கடன்களை 3 மாதம் தொடர்ந்து  செலுத்த தவறினால் சர்ப்பாஸ் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றி உள்ளது. 6 மாதமாக இருந்த சட்டத்தை 3  மாதமாக மாற்றியதன் விளைவாக நாடு முழு மையும் ஆயிரக்கணக்கான குறு, சிறு தொழில்கள் சர்ப்பாஸ் சட்டத்தால் பாதித்து  உள்ளது. குறு, சிறு தொழில் முனைவோர் களை பாதுகாக்க மீண்டும் 6 மாதமாக சர்ப் பாஸ் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது.