நாமக்கல், அக்.13- 2023 - 24 அரவை பருவத்தில் நியாய மான மற்றும் ஆதார விலைக்கு மேல் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட் டுள்ளதென, அமைச்சர் ரா.ராஜேந்தி ரன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், மோகனூரி லுள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் ஞாயிறன்று ஆய்வுக்கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் 16 கூட்டு றவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. 2022 - 23 மற் றும் 2023 - 24 நிதியாண்டுகளில், 10,480 விவசாயிகளுக்கு ரூ.8.40 கோடி மானி யம் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த நீரைப் பயன்படுத்தி கரும்பு சாகுபடி மேற்கொள்ள 2023 – 24 ஆம் ஆண்டு 1,432 ஹெக்டர் பரப்பளவில் புதிதாக நுண்ணீர்ப்பாசனம் அமைக்கப்பட்டு 1,335 விவசாயிகள் பயனடைந்துள்ள னர். மேலும், 2020 - 21 அரவை பருவத் திற்கு நியாயமான மற்றும் ஆதார விலைக்கு மேல் சிறப்பு ஊக்கத்தொகை யாக ரூ.192.50 அறிவிக்கப்பட்டது. 2021-22 மற்றும் 2022-23 அரவை பருவங்க ளில் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.195 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரண மாக அரவை பருவத்தில் கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.3,016 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. 2023-24 அரவை பருவத் தில் நியாயமான மற்றும் ஆதார விலைக்கு மேல் தமிழ்நாடு அரசால் டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.3135 ஆக உயர்த்தப்பட் டுள்ளது, என்றார். முன்னதாக, இணை மின் உற்பத்தி நிலையம் மற்றும் சர்க் கரை ஆலையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கரிய மில வாயு சிலிண்டரில் அடைக்கும் அல கினை அமைச்சர் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சர்க்கரைத் துறை இயக்குநர் த.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் ச.உமா, சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், மாநக ராட்சி மேயர் து.கலாநிதி, அட்மா குழுத் தலைவர் நவலடி, சர்க்கரைத்துறை கூடு தல் இயக்குநர் பி.பாலமுருகன், மோக னூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் க.ரா.மல்லிகா மற்றும் விவசாயிகள், தொழிற்சங்கங் களின் பிரதிநிதிகள், ஆலை தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.