புதுதில்லி, மே 11-இந்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் மட்டும் 3,622 கோடி ரூபாய்க்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள், பாரத ஸ்டேட் வங்கியால் விற்கப்பட்டுள்ளன என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது.புனேயைச் சேர்ந்த விகார் துர்வே என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் எழுப்பியிருந்த கேள்விக்குப் பதில் அளிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1,365.69 கோடி ரூபாய்க்கும், ஏப்ரலில் 2,256,37 கோடி ரூபாய்க்கும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறது.இப்பத்திரங்களில் 694 கோடி ரூபாய்க்கு மும்பையிலும், 417.31 கோடி ரூபாய்க்கு கொல்கத்தாவிலும், 408.62 கோடி ரூபாய்க்கு புதுதில்லியிலும் 338.07 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத்திலும் விற்றுள்ளன என்றும் அது கூறியிருக்கிறது.இத்தேர்தல் நிதிப் பத்திரங்களை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29-ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் பொதுத்தேர்தலில் மக்களவையிலும், சட்டமன்றப் பேரவைகளிலும் 1 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே பெற முடியும் என்று இதுதொடர்பாக பாஜக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டம் கூறுகிறது.தேர்தல் நிதிப் பத்திரங்கள் அளிக்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஹளளடிஉயைவiடிn கடிச னுநஅடிஉசயவiஉ சுநகடிசஅள) வழக்கு தொடுத்திருக்கிறது. இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறது.தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பாக பாஜக அரசு கொண்டுவந்த திருத்தங்கள் மூலமாக அந்நிய கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக நன்கொடை அளித்திடலாம். இது இந்திய ஜனநாயகத்தின் மீது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திடும். இத்திருத்தத்தின் மூலமாக மிக அதிக அளவில் பயனடைந்த ஒரே கட்சி பாஜக என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். (ந.நி.)