districts

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக

ஈரோடு, அக். 5- சாம்சங் நிறுவன தொழிலாளர்க ளுக்கு ஆதரவாக, தமிழகம் முழு வதும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற் சங்கத்திற்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் சாம்சங்  நிறுவனமும், இதற்கு ஆதரவாக  செயல்படும் தமிழக தொழிலாளர்  நலத்துறை மற்றும் காவல் துறையை கண்டித்து தமிழகம் முழு வதும் இடதுசாரி கட்சிகளின் சார் பில் கண்டன இயக்கங்கள் நடத்த இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்தது.  இதன் ஒரு பகுதியாக ஈரோடு  மாவட்டம், சூரம்பட்டியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிசிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஜி.பழனிச்சாமி, ஆர்.கோமதி, நகரச் செயலாளர் பி.சுந்த ரராஜன், தாலுகாச் செயலாளர் பால சுப்ரமணியன் மற்றும் சிபிஐ வட் டாரச் செயலாளர் கல்யாண சுந்தரம்  ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இதில், திரளானோர் ஆர்ப்பாத் டத்தில் கலந்து கொண்டனர். உதகை இதேபோல், நீலகிரி மாவட்டம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மார்க்சிஸ்ட் பந்தலூர் ஏரியா கமிட்டி யின் சார்பாக பந்தலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் பந்தலூர் ஏரியாச் செயலாளர்  ரமேஷ் தலைமை வகித்தார். கட்சி யின் அந்தோணி கிளைச் செயலா ளர் பெரியார் மணிகண்டன் முன் னிலை வகித்தார். மாவட்டக் குழு  உறுப்பினர் ஜி வர்கீஸ், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் பந்தலூர் ஏரியாச் செயலாளர் இராசி இரவிக் குமார் ஆகியோர் கண்டன உரை யாற்றினார்.  தேவாலா கிளைச் செயலாளர் ஷாஜி, அசைன் வாலிபர் சங்க ஏரியா கமிட்டி உறுப்பினர் ஷெரீப்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.