நாமக்கல், ஜூலை 13- பொதுமக்கள் செலுத்தும் பிரிமீயத் திற்கும் ஒன்றிய பாஜக அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பது ஏற்புடையதல்ல, இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க திருச்செங் கோடு கிளை மற்றும் ஈரோடு கிளையை சார்ந்தவர்கள் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷை சனி யன்று சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, எல்ஐசி பாலிசி பிரிமியங்கள் மீது, ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படு கிறார்கள். எனவே, பிரிமீயத்துக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். எல்ஐசி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகவே செயல்பட நடவ டிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ள னர். இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகி கள் சாந்தி,உஷா, அர்த்தநாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.