திருப்பூர், ஆக.11- அனைத்து கட்டுமானத் தொழிலாளர் களுக்கும் வீடு வழங்க வேண்டும் என சிஐடியு திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டு மானத் தொழிலாளர் சங்க திருப்பூர் வடக்கு தாலுகா மாநாட்டில் கோரிக்கை வைக்கப் பட்டது. சிஐடியு திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டு மானத் தொழிலாளர் சங்க திருப்பூர் வடக்கு தாலுகா 15 ஆவது கோரிக்கை மாநாடு ஞாயி றன்று தனியார் மண்டபம் வாவிபாளையம் பகுதியில் நடைபெற்றது. தாலுகா தலைவர் எஸ். சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சங்க கொடியை கன்னியப் பன் ஏற்றி வைத்தார் தாலுகா துணைத் தலை வர் பத்மநாபன் வரவேற்றார், மாநிலச் செய லாளர் டி.குமார் மாநில துணைச் செயலா ளர் கே. மனோகரன், தாலுகா செயலாளர் சி.ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், கட்டுமான பெண் தொழிலாளர்க ளுக்கு 55 வயது முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகை ரூபாய் 3000 ஆக உயர்த்தி தர வேண்டும். அனைத்து கட் டுமானத் தொழிலாளர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொ டர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். நிர்வாகிகள் தேர்வு: சிறப்பு தலைவராக எஸ்.சுப்பிரமணி, தாலுகா தலைவராக எம்.பத்மநாபன், செய லாளராக சி.ராஜன், பொருளாளராக சி.மனோ கரன் உட்பட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.