districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

யானை தாக்கி விவசாயி பலி

ஈரோடு, ஆக. 2- ஆசனூர் விளைநிலத்தில் பன்றி நுழையாமல் காவல் இருந்தவரை யானை தாக்கியதில் பெண் விவசாயி பலி யானார். ஆசனூர் அருகே கேர்மாலம், கன்கரியைச் சேர்ந்தவர்  ஜடயன். இவரது மனைவி மாதம்மா (52).  இவர்கள் தங்க ளுக்கு சொந்தமான விவசாய பூமியில் உருளைகிழங்கு பயிருட்டுள்ளனர். இதனை இரவு நேரத்தில் பன்றிகள் சேதப் படுத்தி வந்தது. எனவே அவற்றைப் பாதுகாக்க அங்கேயே  தங்கியிருந்தனர். இந்நிலையில் திங்களன்று இரவு தங்கியி ருந்த போது சாலையில் புகுந்த காட்டு யானை ஒன்று மாதம்மா வின் காலை துதிக்கையால் பிடித்து வெளியே இழுத்து வீசியது. இதில் அவருக்கு பலத்த அடிபட்டது. ஜடயனின்  அபாய சத்தம் போட சத்தம் கேட்டு கிராம மக்கள் உதவிக்கு  வந்தனர். அவர்கள் உதவியுடன் யானையை துரத்திவிட்டு மாதம்மாவை பார்த்த போது யானை தாக்கியதில் சம்பவ  இடத்திலே பலியாகியது தெரியவந்தது. இதுகுறித்து ஆசனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள் ளனர்.

வீடியோ வெளியிடுவதாக மிரட்டல் மருத்துவமனை ஊழியர் கைது

சேலம், ஆக.2- பெண் குளிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என  மிரட்டிய மருத்துவமனை ஊழியர் கைது செய் யப்பட்டுள்ளார்.  சேலம், பெரியவீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது தொழிலாளிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சேலம், 2ஆவது அக்ர ஹாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கக் பட்டார். அவரை, மனைவி உடனிருந்து  கவனித்து வந்தார். இந்நிலையில்,  சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந் நிலையில் அந்த பெண்ணை செல் போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர்,  மருத்துவமனையில் தங்கி இருந்தபோது  குளியறையில் குளித்த வீடியோ என்னிடம்  உள்ளது, நான் அழைக்கும் இடத்திற்கு  வர வேண்டும் என மிரட்டியுள்ளார்.  இதனால், அப்பெண்ணின் குடும்பத் தினர் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத் தில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு வராவிட்டால், குளிக்கும் வீடி யோவை சமூக வலைதளங்களில் வெளி யிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார்.  இதனால் அச்சமடைந்த அந்த பெண், சேலம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அதன்பேரில் காவல்துறையினர் விசா ரணை நடத்தியதில், அடையாளம் தெரி யாத நபரின் செல்போன் எண்களை வைத்து  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், தனியார் மருத்துவ மனையில் பணியாற்றிய திருச்சி பாளையம் பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என  விசாரணை தெரியவந்துள்ளது. இதைய டுத்து தனியார் மருத்துவமனை ஊழியர் விவேகானந்தன் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறை யில் அடைக்கப்பட்டார்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டு மோசடி

தருமபுரி, ஆக.2- ரூ.500 நோட்டு கொடுத்தால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு தருவதாக ஆசை காட்டி பத்து லட்சம் ரூபாய் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய் தனர். தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கருத்தானூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (31). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் ராஜேந்திரன் என்பவர், தனக்கு தெரிந்த முக்கிய பிர முகர் ரூ.3,200 கோடிக்கு ரூ.2ஆயிரம் நோட்டு களாக வைத்துள்ளதாகவும், அதனை மாற்ற  முடியாமல் தவித்து வருவதாக தெரிவித் துள்ளார். மேலும், ரூ.500 நோட்டுகளாக வங்கி யில் இருந்து பத்து லட்சம் எடுத்து கொடுத் தால், அதற்கு பதிலாக அவர் ரூ.13 லட்சத் துக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக தரு வார்கள் என தெரிவித்துள்ளார். நண்பர் கூறி யதை நம்பி சுரேஷ் வங்கியில் இருந்து ரூ. 10 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.  

அப்பணத்தை எடுத்துக்கொண்டு செவ் வாயன்று சுரேஷ், அவரது தந்தை நாகராஜ், ராஜேந்திரன் ஆகிய 3 பேரும் காரில் தரும புரியை அடுத்த நல்லம்பள்ளிக்கு வந்தனர்.  அப்போது 3 பேரும் அந்த முக்கிய பிரமு கரின் ஏஜெண்டை தொடர்பு கொண்டனர். அவர் காரை அங்கேயே விட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தில் தான் கூறிய இடத்திற்கு வருமாறு சுரேஷிடம் கூறியுள்ளார். இதை யடுத்து, 3 பேரும் இருசக்கர வாகனத்தில் ஏஜெண்டு கூறிய இடத்திற்கு வந்தனர். அப் போது நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் 2 பேர் கையில்  பையுடன் அங்கு வந்தனர். சுரேஷிடம் இருந்து பையை வாங்கி கொண்டு, தாங்கள் கொண்டு வந்த பையை  சுரேஷிடம் கொடுத்தனர். இவர்கள் பிரித்து  பார்ப்பதற்குள், உடனே இங்கிருந்து புறப் பட்டு செல்லுங்கள் இங்கு ஆபத்து உள்ளது என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளானர். இதனை நம்பிய  சுரேஷ் உள்ளிட்ட மூவரும் சிறிது தூரம் சென்ற பிறகு பையை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில் ரூ.2  ஆயிரம் நோட்டுகளுக்கு பதிலாக வெள்ளை தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.  அதிர்ச்சியடைந்த சுரேஷ், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஏரி யூர் சீலநாயக்கனூரைச் சேர்ந்த முருகன் (45),  அவரது நண்பர் ஆகிய 2 பேரையும் கைது  செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

ரூ.3 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு 

தாராபுரம், ஆக.2- தாராபுரம் அனுமந்தராயர் கோயில் மற்றும் லட்சுமி நாராய ணசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான  13.12 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினர்  மீட்டனர்.  தாராபுரம் வட்டார பகுதியில் காடு அனுமந்தராயர் திருக் கோவிலுக்கு சொந்தமான 10.98 ஏக்கர் நிலமும், கோனார் புரம்   லட்சுமி நாராயணசாமி கோவிலுக்கு சொந்தமான 2.14 ஏக்கர்  நிலம் தனியார் வசம் இருந்து வந்தது. இந்நிலையில், அற நிலையத் துறையினர் நிலத்தை மீட்க  திருப்பூர் மாவட்ட வரு வாய் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதன் தீர்ப்பு   கோவிலுக்கு சாதகமாக பட்டா மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கப் பட்டது. இதனால் நிலத்தை பயன்படுத்தி வந்தவர்கள் அவர் களே  தாமாக முன் வந்து ஒப்படைத்தனர். பெறப்பட்ட பூமியின் இன்றைய மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.

போட்டோ கிராப்பரை தாக்கிய 4 பேர் கைது

தாராபுரம், ஆக. 2- தாராபுரம் அருகே  போட்டோ கிராப்பரை தாக்கி ரூ.30  ஆயிரம் மதிப்புள்ள கேமராவை பறித்து சென்றதுடன், வழி யில் வந்த முதியவரிடம் பணம் கேட்டு தாக்கிய 4 வாலிபர்கள்  மீது கொள்ளை மற்றும் அடிதடி வழக்கு பதிவு செய்து  காவால் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் கூறியிருப்பதாவது, தாராபுரம் அருகே தில்லாபுரி அம்மன்  கோவில் உள்ளது. காமராஜபுரத்தை சேர்ந்த முருகானந்தம் (எ) எட்டையப்பன் (19), இவருடைய அண்ணன் மாசான் (23),  மதன்( 26), காமன் கோவில் வீதியை சேர்ந்த சந்துரு (23) ஆகிய  நால்வரும்  தில்லாபுரி அம்மன் கோயில் அருகில் மது குடித்து  கொண்டு இருந்தனர். அப்போது பீமராய தெருவை சேர்ந்த போட்டோ கிராப்பர் நவீன்குமார்(23) கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்து கொண்டு இருந்தாக கூறப்படுகிறது. அப் போது நவீன்குமாரிடம் குடிபோதையிலிருந்த 4 நபர்களும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கி கேமராவை பறித்து  சென்றனர். இதனைத் தொடர்ந்து அதே வழியில் வந்த குப்பிச் சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (50) என்பவரிடம்  பணம் கேட்டு  தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த சண்மு கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிறகு போலீசார் சண்முகத்திடம் வாக்குமூலம் பெற்று வழக்கு  பதிவு செய்தனர். அதேபோல நவீன்குமார் கொடுத்த புகாரின்  பேரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட  வழக்கு ஆகிய  இரண்டையும் சேர்த்து வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கு பதிவு  செய்தனர். பிறகு முருகானந்தன், சந்துரு, மாசான் மற்றும்  மதன்  ஆகிய நால்வரை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.  அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட கேமராவை மீட்டு, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஜிஎஸ்டி வரியை குறைக்கலாமே? 

திருப்பூர், ஆக.2- திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக குழு தலைவர் அன்பகம் திருப்பதி பேசுகையில், மாநகராட்சி ஆழ்குழாய்  உள்ளிட்ட பணிகளுக்கு ஒதுக்கப்படும் தொகையில் 18 சதவீ தம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் நிதி ஒதுக்கீடு  குறைந்து பணிகள் செய்வது பாதிக்கப்படுகிறது. பொதுப் பணிகளுக்கு இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் வரியை குறைப்ப தற்கு முயற்சிக்க வேண்டும். மாநில அரசு மூலம் ஜிஎஸ்டி கவுன் சிலில் இக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும், என்றார். இதற்கு பதில் அளித்த மேயர் தினேஷ்குமார், ஜிஎஸ்டி பிரச் சனையில் மாநில அரசு தொடர்ந்து போராடிக் கொண்டி ருக்கிறது. அதிமுக தான் பிரதமருக்கு அருகிலேயே இருக் கிறது. அவர்கள் கேட்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பதிலடி கொடுத்தார். காங்கிரஸ் கவுன்சிலர் செந்தில்குமார் பேசுகையில், காங் கேயம் சாலை, தாராபுரம் சாலை விரிவாக்க பணி செய்யப்ப டுகிறது. அங்கிருந்து மழைநீருடன் கழிவுநீரும், பிகேஆர் கால னிக்கு செல்லாமல் கால்வாயை உரிய முறையில் அகலப் படுத்தி கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திருப்பூரில் மாவட்ட மைய நூலகம் அமைக்க க.செல்வராஜ் எம்எல்ஏ கோரிக்கை

திருப்பூர், ஆக. 2 - திருப்பூரில் மாவட்ட மைய நூலகம்  அமைத்து தரும்படி திருப்பூர் தெற்கு  எம்எல்ஏ க.செல்வராஜ் கோரியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு புதனன்று திருப் பூர் தெற்கு எம்எல்ஏ க. செல்வராஜ் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்திற்கு என விரிவு படுத்தப்பட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மாவட்ட மைய நூலகம் என்பது இதுவரை இல்லாத நிலையே உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ளும் மாணவர்கள் குறிப்பெடுக்கவோ, அமர்ந்து படிக்கவோ அல்லது புதுப் புது புத்தகங்கள் சம்பந்தமாக விவாதிக் கும் வாசகர் வட்டம் போன்ற நிகழ்ச்சி கள் நடத்தவோ தற்போது திருப்பூரில் உள்ள நூலகங்களில் போதிய இட வசதி  இல்லை. திருப்பூரில் தொடர்ந்து நடத்தப் பட்டு வரும் புத்தக கண்காட்சிகள் மற் றும் சமூக ஊடகங்களின் வாயிலாக ஏற் படுத்தப்படும் விழிப்புணர்வுகளால் தற் போது புத்தகம் வாசிப்போர் எண்ணிக் கையும் கணிசமாக அதிகரித்து வரு வதை காண முடிகிறது. எனவே திருப்பூர்  மாவட்ட மைய நூலகம் ஒன்று அமைத்து  தருவீர்கள் என்ற எதிர்பார்ப்போடு கல்வி யாளர்களும், மாணவர்களும் புத்தகம்  வாசிப்போரும் இருந்து வருகின்றனர். அந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றி டும் வகையில், திருப்பூரில் கலைஞர் பேருந்து நிலையத்தின் எதிர்புறம் உள்ள  மார்க்கெட் வளாகத்தில், 1953 இல் அமைக்கப்பட்ட காந்தி நூலகம் செயல் பட்டு வருகிறது. இந்த நூலகம் அமைந் துள்ள இடம் 18 சென்ட் பரப்பளவு கொண்டது. இதனை புனரமைத்து, கட் டடத்தை விரிவாக்கம் செய்து, அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட மைய நூலகம் அமைத்துத் தரும்படி மாவட்ட மக்களின் சார்பாக கேட்டுக் கொள்வதாக க.செல்வராஜ் எம்எல்ஏ கூறியுள்ளார்.

குடியரசு தலைவர் வருகை எதிரொலி முதுமலையில் டிரோன்கள் பறக்க தடை

உதகை, ஆக.2- முதுமலைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  ஆக.5 ஆம் தேதியன்று வர உள்ள நிலையில், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப் பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு பரா மரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை மையமாக வைத்து ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படம் எடுக் கப்பட்டது. அந்தப் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்த தால், அதில் இடம் பெற்ற பாகன் தம்பதி பொம்மன் - பெள்ளி ஆகியோருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்த னர். கடந்த ஜூலை மாதம் தில்லியில் குடியரசு தலைவர் திரௌ பதி முர்முவை பொம்மன், பெள்ளி ஆகியோர் சந்தித்து முது மலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதையேற்று குடி யரசு தலைவர் ஆக.5 ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம், மைசூரு வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை கள் முகாமுக்கு வருகிறார். இதைத்தொடர்ந்து முன்னேற் பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. இதையடுத்து உதகையில் அதிகாரிகள் குழுவினர், குடி யரசு தலைவர் வருகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடத்தினர். தொடர்ந்து 2 ஆவது நாளாக தெப்பக்காடு முகா மில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பக பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், முதுமலை, மசினகுடி உள்ளிட்ட இடங்க ளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 900 போலீசார் வரவழைக் கப்பட உள்ளதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பிரபாகர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71.40 லட்சம் மதிப்பிலான செல்போன் வழங்கல்

கோவை, ஆக.2- 527 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,549 வீதம் ரூ.71.40 லட்சம் மதிப்பிலான அலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, 2023 – 24 ஆம் நிதியாண்டில் வரவு  செலவுத் திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1106.49 கோடி தொகையானது, இது வரை இத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளிலேயே மிக வும் அதிகமானது. ஐந்து வகையான மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் மாதம் ரூ.1500 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், ரூ.2 ஆயிரமாக ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத் திற்காக 2023 -24 ஆம் நிதியாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ.567.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை  மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற் றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்கள்  செயல்படுத்தி வருகிறது. இத்துறையின் மூலம் 54,605 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 24,184 மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளும் வழங்கப் பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலை வாய்ப்பு பெற்று வழங்கும் நோக்கத்துடன் ஆலோசனை மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செப்டம் பர் 2021ல் பிரத்யேகமாக துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத் தின் மூலம் 589 ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்த தேசிய  அடையாள அட்டை (UDID) 4550 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட் டத்தின் கீழ் 93 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21.17 லட்சம் வங் கிக்கடன் மானியம், அனைத்து வகையான மாற்றுத்திறனாளி களுக்கான திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், 59 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.24.75 லட்சம் திருமண நிதியுதவி, ஆவின்  நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி  வழங்கப்பட்டுள்ளது. மேலும், 37 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7,900 வீதம் ரூ.292 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி களும், 23 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.83,500 வீதம்  ரூ.19.20 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,05,500 வீதம் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 527 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,549  வீதம் ரூ.71.40 லட்சம் மதிப்பிலான அலைபேசிகளும் வழங்கப் பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

கோவை, ஆக.2- காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆக் கிரமிக்கப்பட்டிருந்த 25 கடைகளை அதிகாரி கள் அகற்றினர். கோவை காந்திபுரத்தில் மாநகர பேருந்து  நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத் தில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் அவ்வழி யாக நடந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகினர். எனவே ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத் தரவின் பேரில், மத்திய மண்டல உதவி ஆணை யர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் மாந கராட்சி ஊழியர்கள் மாநகர பேருந்து நிலை யத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக் கப்பட்டிருந்த செல்போன் கடை, செருப்பு கடை உட்பட 25 கடைகளை அகற்றினர். இத னையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், காந்திபுரம் மாநகர பேருந்து  நிலையத்தில் பொதுமக்களுக்கு இடை யூறாக இருந்த 25 கடைகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு மீண்டும் கடைகள் வைக் காதவாறு கண்காணிக்கப்படும். நடைபாதை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும், என்றனர்.

பருத்தி ஏலம்

நாமக்கல், ஆக.2- நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்க வளாகத் தில் செவ்வாயன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. 2,850 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஆர்சிஎச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரத்து 251 வரையில் ஏலம் போனது. மொத்தம் ரூ.65 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது.