districts

img

ஊதிய உயர்வு கேட்டு கௌரவ விரிவுரையாளர்கள் தர்ணா

தருமபுரி, பிப்.3- பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌ ரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு  கேட்டு கண்களில் கருப்புத் துணி கட்டி  தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 10  ஆண்டுகளாக காலியாக உள்ள பணியி டங்கள் நிரப்பப்படாமல் கௌரவ விரி வுரையாளர்களை வைத்து மாணவர்க ளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. தமி ழக அரசு தற்போது கௌரவ விரிவுரை யாளர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், யுஜிசி விதி முறைப்படி மாதம்  50 ஆயிரம் ரூபாய்  வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவையும் கடை பிடிக்காமல் அரசு  அலட்சியம் செய்கிறது. இதனைய டுத்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க் கும் வகையில், திங்களன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரி யும் சுமார் 60 கௌரவ விரிவுரையாளர் கள் சம்பள உயர்வு கேட்டு கண்களில்  கருப்புத் துணி கட்டி கொண்டு கல்லூரி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக கெளரவ விரிவுரையாளர்கள் தங்கள் குடும்பத்துடன்  போராட உள்ளதாக தெரிவித்தனர்.