districts

img

காலியிடங்களை நிரப்பிடுக: சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப்.13- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், என வலியுறுத்தி தமிழ் நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தி னர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலியாக உள்ள சுகாதார ஆய் வாளர் நிலை 2 பணியிடங்களை உட னடியாக போர்க்கால அடிப்படை யில், தற்பொழுது தொகுப்பூதியத் தில் பணிபுரிந்து வரும் சுகாதார ஆய் வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்ப வேண்டும். சுகாதார ஆய்வா ளர் நிலை 2 பணியிடங்களை 2715 ஆக  நிர்ணயிக்கக்கோரி, பொது சுகாதா ரத்துறை இயக்குநர் அரசுக்கு அனுப் பிய கோப்புக்கு உடனடி ஒப்புதல் வழங்க வேண்டும். 5 ஆயிரம் மக்கள்  தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வா ளர் நிலை 2 என்ற கொள்கை முடிவை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தி னர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி சுகாதாரப் பணிகள்  துணை இயக்குநர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சுகாதார ஆய்வாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் சண்முகம்  தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் கரிகாலன், மாவட்டச் செயலாளர் சுதாகர், மாவட் டப் பொருளாளர் லோகநாதன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி  பேசினர். இதில் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட தணிக்கையாளர் யாரப்பாஷா, பொது சுகாதாரத் துறை  அலுவலர் சங்க மாவட்டச் செயலா ளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.