ஈரோடு, நவ. 15- தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஈரோடு சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சுகாதார ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். 5000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உரிய முறையில் நிரப்ப வேண்டும். தொடர்ந்து வஞ்சிக்கப்படும் மூத்த சுகாதார ஆய்வாளர்களை தரம் தாழ்த்துவதை கைவிட வேண்டும். இளைய சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்யப் பட வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜீவானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சங்கர் வரவேற் றார். மாநில செயற்குழு உறுப்பினர் ரகு கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் விஜயமனோகரன், அனைத்து பெண்கள் அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மலர்விழி, சந்திரலேகா ஆகி யோர் வாழ்த்தி பேசினார். நிறைவாக மாவட்ட பொரு ளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.