51 பேர் எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு
சேலம், ஜூன் 9- சேலம் மாநகரில் 51 பேர் சிறப்பு காவல் உதவி ஆய்வா ளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகளில் எந்தவிதமான பிரச்னைகளுமின்றி பணியாற்றி யவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகரில் 25 ஆண்டுகள் பணி முடித்த 51 பேருக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி, சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் 1 ஆம் தேதியே பதவி உயர்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதால், ஒரு வாரம் கழித்து சனியன்று பதவி உயர்வு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 மணி நேரம் நீடித்த கை மறு பொருத்தும் சிகிச்சை
சேலம், ஜூன் 9- விபத்தில் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு கை துண்டான நிலையில், சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் 6 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கை மறு பொறுத்தம் செய்யப்பட்டது. சேலத்திலுள்ள காவேரி மருத்துவமனையில், நவீன தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் மருத்துவ சிகிச்சை சேவை கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், சேலம் காவிரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு கை துண்டிக் கப்பட்டு இருந்தது. 2 மணி நேரம் கழித்து ஐஸ் பெட்டியில் துண்டிக்கப்பட்ட கையுடன் அவர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். எலும்பியல் நிபுணர் அருண் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் ஆகியோர் நோயாளியை பரிசோதித்து, அவருக்கு உடனடி யாக அறுவை சிகிச்சை செய்தனர். தொடர்ந்து 6 மணி நேரம் நீடித்த கை மறு பொறுத்தும் அறுவை சிகிச்சை அவ ருக்கு மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையில் எழும்பு நிபுணர் எலும்பியல் நிபுணர் எலும்பை சரி செய்வதையும் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மென்மை யான திசுக்களை நுணுக்கமாக சரி செய்வதையும் மேற் கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய காலகட் டத்தில் அலர்ஜியை தடுக்கவும், காயத்திற்கான முறையான பராமரிப்பு வழங்கவும் ஏதுவாக நோயாளிக்கு ஐசியு-வில் சிகிச்சை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 14 நாட்களுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பட்டம் விடுவதால் ஏற்படும் மின்தடை!
ஈரோடு, ஜூன் 9- பட்டம் விடுவதால், பட்டம் மற்றும் அதனு டன் இணைந்த நூல் மின்கம்பியில் சிக்கி மின் தடை ஏற்படுகிறதென மின்வாரிய செயற்பொ றியாளர் தெரிவித்துள்ளார். ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட வீரப்பன் சத்திரம் உப கோட்டம், வீரப்பன் சத்திரம் பிரிவு அலுவல கத்திற்கு உட்பட்ட திருநகர் காலனி, கிருஷ் ணம்பாளையம், ஜீவா நகர், ராமமூர்த்தி நகர், சிந்தன் நகர், கமலா நகர் ஆகிய பகுதிகளுக்கு திருநகர் காலனி மின்பாதை வழியாக மின்னூட்டம் அளிக்கப்படுகிறது. இப்ப குதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் மாலை நேரங்களில் பட்டம் விடுவதால், பட்டம் மற்றும் அதனுடன் இணைந்த நூல் மின் பாதையில் சிக்கி கொண்டு தொடர்ச்சியாக மின்தடை ஏற்படுகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் பொதுமக்கள் விட்ட பட்டம் சிக்கிய தால் 19, 21, 22, 25 ஆகிய தேதிகளில் தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்தடை ஏற்படுவ தால் வ.உ.சி. பூங்காவில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்திற்கு மின்சாரம் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, பட்டம் விடுவதை தவிர்த்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விவசாய கிணற்றில் விழுந்து சிறுமி பலி
விவசாய கிணற்றில் விழுந்து சிறுமி பலி நாமக்கல், ஜூன் 9- கபிலர்மலை அருகே விவசாய கிணற்றில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே உள்ள சின்ன சோளிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி வரதராஜன் - பூமாலை. இவர்களுக்கு ரதிமா (15), ஹேமா (10), சபரீஷ் (6) என மூன்று குழந்தைகள். இந்நிலையில், ஹேமா அப்பகுதியைச் சேர்ந்த சிறுமிகளுடன் சேர்ந்து சின்னசோளிபாளையம் அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் கீழே விழுந்து கிடக்கும் தேங் காய்களை எடுப்பதற்காக சென்றுள்ளனர். ஹேமா எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவருடன் வந்த சிறுமிகள் ஊருக்குள் சென்று அங்கிருந்தவர்களிடம் ஹேமா கிணற்றில் தவறி விழுந்தது குறித்து தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலின்பேரில் வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் மூழ்கிய சிறுமி ஹேமாவின் உடலை மீட்டனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சியுடன் பழங்கரையை இணைக்க எதிர்ப்பு
அவிநாசி, ஜூன் 9- பழங்கரை ஊராட்சியை, திருப் பூர் மாநகராட்சியுடன் இணைப்ப தாக அறிவிப்பு வெளியான நிலை யில், இந்த முடிவிற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சியில் சுமார் 18 ஆயிரம் வாக்காளர்கள், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியி ருப்புகள், 100க்கும் மேற்பட்ட பனி யன் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வரு கின்றன. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம், தலைமை தபால் நிலையம் போன் றவை மிக அருகாமையில் உள் ளன. ஊராட்சி அளவில் 12 வார்டு உறுப்பினர்கள், இரண்டு ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். திருப் பூர் மாநகராட்சிக்கும், பழங்கரை ஊராட்சிக்கும் தொலைதூரமானது 15 கிலோமீட்டர் ஆக உள்ளது. பச்சாம்பளையம், பெரியாயி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலரும் விவசாயம் செய்து வருகின் றனர். மேலும், கால்நடை வளர்ப்பி லும் ஈடுபட்டு வருகின்றனர். போக்கு வரத்து வசதி என்றால் அவிநாசி புதிய பேருந்து நிலையம், அவிநா சிலிங்கம்பாளையம் போன்ற இடங் கள் உள்ளன. சுமார் 15 வருடங்க ளுக்கு முன்பிருந்தே பழங்க ரையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, பழங்கரை ஊராட்சியை, திருமுருகன்பூண்டி நகராட்சியுடன் இணைக்க முயன்ற போது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. கருத்துக்கேட்பு கூட்டத்தின் முடி வில், இந்த முயற்சி கைவிடப்பட் டது. மேலும் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வரு வதை நகராட்சியாக தரம் உயர்த் தும்போது, பழங்கரை ஊராட்சியை இணைப்பதுதான் அப்பகுதி பொது மக்களில் வலுவான கருத்தாக இருந்து வருகிறது. தற்பொழுது ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம், திருப்பூர் மாநகராட்சியுடன் பழங்க ரையை இணைப்பது குறித்து கடி தம் அனுப்பப்பட்டதாக தெரிய வரு கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி அளவில் ஜூன் 10 அல்லது 11 ஆகிய தேதிகளில் அனைத்து கட்சி நிர்வா கிகள், பொதுமக்கள் அடங்கிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள னர். இதில் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட நிர்வா கத்திற்கு அனுப்ப உள்ளதாக கூறப் படுகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பழங்கரையை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால், 100 நாள் வேலை திட்டம் பறிபோகும். வரு வாய் பதிவேடு முதல் பத்திரப்பதி வுத்துறை வரை மாநகராட்சிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உரு வாகும். சொத்துவரி முதல் குடிநீர் கட்டணம் வரி வரை அதிகரிக்கச் செய்யும். விவசாயம் பொய்த்து போகும் சூழ்நிலையில், ஊராட்சி அளவில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வந்தால், வரி என்பது குறைவாக இருந்து வருகிறது. இதுபோன்ற சலுகைகள் தற்போது வரை நடைமுறையில் இருந்து வரு கிறது. பழங்கரை ஊராட்சியை பொறுத்த வரை அதிகாரிகள் தொடர்ச்சியாக தவறான ஆலோச னைகளை அளித்து வருகின்றனர். அவிநாசி பேரூராட்சியை நகராட்சி யாக தரம் உயர்த்தி, நகராட்சியு டன் பழங்கரை ஊராட்சியை இணைப்பது என்பதே பொருத்த மாக இருக்கும் என்பது எங்களின் கோரிக்கையாகும், என்றனர்.
அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த சார்பதிவாளர் பணியிடை நீக்கம்
கோவை, ஜூன் 9- தமிழ்நாட்டில் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகள் ஆகியவற்றை பத்திரப்பதிவு செய்யக் கூடாது. அதற்கான சர்வே எண்களில் வரும் பத்திரங்களை பதிவு செய்யக்கூடாது என்று பத்திரப் பதிவுத் துறை அனைத்து சார்பதிவாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித் துள்ளது. ஆனால், அதை மீறி சில நிலங்கள் பதிவு செய்யப்ப டுகிறது. இந்நிலையில், கோவை பந்தையசாலை பகுதி முழு வதும் அரசு நிலங்கள் உள்ளன. அதில் ஒரு சர்வே எண் ணில் உள்ள சுமார் 3.80 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விடுதி உள்ளது. அதில் மீத முள்ள 1.80 ஏக்கர் நிலத்தை கடந்தாண்டு அக்.28 ஆம் தேதி யன்று, பொது அதிகார ஆவணம் மூலம் பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 1,200 கோடியாகும். இதுகுறித்த புகாரின்பேரில், பத்திரப்ப திவு மேற்கொண்ட கோவை வடக்கு ஒன்றிய இணை சார்பதிவாளர் ஜெயசுதா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டார்.
சேலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பணி நீக்கம்
சேலம், ஜூன் 9- லஞ்சம் வாங்கிய வழக்கில், சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேசன் பணிநீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக கணேசன் என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரக்காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, நிலப்பிரச்சினை ஒன்றில் புகாரளிக்க வந்தவரிடம், அப்போதைய பழனி நகரக்காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரமும், கணேசனும் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகளும் பரவத்தொடங்கின. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கணேசன் ஆஜராகி வந்தார். இந்நிலையில், மேற்கண்ட விசாரணையில் உண்மை தன்மை கண்டறியப்பட்டு அதற்கான அறிக்கை உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா, கணேசனை பணி நீக்கம் செய்யக்கோரி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, சேலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேசன் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணையை அவரிடம் வழங்கினார். இச்சம்பவம் சேலம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.