districts

img

சந்தை வளாகத்தை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்திடுக

நாமக்கல், ஜூன் 27- கபிலர்மலையிலுள்ள சந்தை வளாகம், புதிதாக கட்டப்பட்ட கடை களை கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் ஒப்படைக்கக்கோரி, ஊராட்சி மன்றத் தலைவர் தலைமை யில் 100க்கும் மேற்பட்ட பொதுமக் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலையில் உள்ள சந்தை மைதானத்தை கபி லக்குறிச்சி ஊராட்சி மன்ற நிர்வாகம் பராமரித்து வருகிறது. தைப்பூச தேர்த் திருவிழாவின் போது கடைகள் அமைப் பதற்கு கிராம ஊராட்சி மூலம் ஏலம் விடப்பட்டும், ரூ.49 லட்சத்து 90 ஆயி ரம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர், தரை யில் கான்கிரீட் கற்கள் அமைத்தும், 6  கடைகள் கட்டப்பட்டும் கபிலக்குறிச்சி ஊராட்சி மன்றம் நிர்வகித்து வருகி றது. ஆனால், கபிலர்மலை ஊராட்சி  ஒன்றிய நிர்வாகத்தின் பெயரில் தான்  அந்த இடம் உள்ளது எனவும், அவற்றை கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தான் நிர்வகிக்கும்  எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து கபிலக்குறிச்சி ஊராட்சி  மன்றத் தலைவர் வடிவேலு தலைமை யில், புதனன்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு, உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவ லர் ராஜேந்திர பிரசாத், கபிலர்மலை ஒன்றியக்குழு தலைவர் ரவி, உறுப் பினர்கள், ஜேடர்பாளையம் காவல் துறையினர் ஆகியோர் போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்தை மேற்கொண்டனர். அப்போது, இப்பிரச்சனை குறித்து நாமக்கல் ஆட்சியரிடம் பேசி 10 நாட்க ளில் சிறப்பு கூட்டம் நடத்தி, தீர்மா னங்கள் நிறைவேற்றி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் ஒப்படைக்க உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதிய ளித்தார். அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.