districts

img

திருப்பூரில் வேலை குறைந்து நலிவைச் சந்திக்கும் கிரில் ஒர்க் ஷாப்புகள்

திருப்பூர், ஜூன் 14 – திருப்பூரில் உள்ள கிரில் ஒர்க் ஷாப்புகள்  போதிய வேலை இல்லாமல் நலிவைச் சந் தித்து வருகின்றன. திருப்பூர் நகரின் பிரதானமான தொழில்  பின்னலாடை உற்பத்தி. திருப்பூர் வேலை வாய்ப்பு அளிக்கும் நகரம், குட்டி ஜப்பான்,  டாலர் சிட்டி என்று பல்வேறு புகழ் வார்த்தை களால் அழைக்கப்பட்டு வந்தது.எனினும் பின் னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற் பத்தி தொழில்கள் கடும் நெருக்கடியைச் சந் தித்து வருகின்றன. குறிப்பாக, மோடி அரசு பொறுப்புக்கு வந்த இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் அடுத்தடுத்த தாக்குதல்களால் இந்த தொழில் நிலை குலைந்து போயுள் ளது. குறிப்பாக ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற  அறிவிப்பில் தொடங்கி, அதிரடியாக எந்த முன்தயாரிப்பும், பயிற்சியும் அளிக்காமல் ஜிஎஸ்டி வரி விதிப்பைத் திணித்தது, இத் தொழிலுக்கு மூலப்பொருளான பருத்தி, நூல்  விலைகளை கட்டுப்படுத்த தவறியது, விலை வாசியை குறைக்க தொழில் துறையினர்  கோரியபோதும், தலையிட மறுத்தது, இ - வே பில் முறை என்று தொழில் துறையினரை வதைப்பது, இவையெல்லாம் போதாது என்று கொரோனா பெருந்தொற்று முடக் கம் வந்தது. இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொண்டு “வேலைவாய்ப்பு நக ரம்”: திருப்பூர் என்ற அடையாளத்தை அழித் துவிட்டது என்றால் மிகையல்ல. பின்னலாடைத் தொழில் பாதிக்கப்பட் டால் அதில் நேரடியாக வேலைவாய்ப்பு பெறும் தொழிலாளர்கள், அந்த தொழிலை  நடத்தும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படு வார்கள் என்பது மட்டுமல்ல, அந்த தொழி லைச் சார்ந்து பல்வேறு வகையிலும் நடைபெ றும் இதர சார்புத் தொழில், வணிக நடவடிக் கைகளும் நிலைகுலைந்து போய் விட்டன. அதில் ஒன்றுதான் கிரில் தொழில்! திருப் பூர் தொழிற்சாலைகளுக்குத் தேவையான டேபிள், உள்கட்டமைப்பு, இரும்பு கதவு, ஜன் னல் உள்ளிட்ட பணிகளுக்கு கிரில் ஒர்க் முக்கி யமாகும். இது மட்டுமின்றி பின்னலாடைத் தொழில் செழிப்பாக நடைபெறும்போது பணப்புழக்கம் அதிகரிக்கும். அதன் மூலம்  பலர் சொந்த வீடுகள் கட்டுவார்கள். ஏற்கெ னவே நிலம் வைத்திருக்கக்கூடியவர்கள் தொழிற்சாலை கட்டடங்கள், வணிக வளா கங்கள், கடைகள் கட்டி பிறருக்கு வாட கைக்கு விடுவார்கள்.

இத்தகைய கட்டுமானத் தொழிலின் ஒரு  பிரிக்க முடியாத அங்கமாக கிரில் ஒர்க்ஸ் தொழிலும் நடைபெறும். குறிப்பாக திருப் பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சியில் ஏறு முகமாக இருந்த 1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இதைச் சார்ந்து கிரில் தொழிலும் வளர்ந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் புதிது  புதிதாக கிரில் ஒர்க் ஷாப்புகள் முளைத் தன. ஆனால் இன்று திருப்பூர் நகரை வலம்  வந்தால் பல கிரில் ஒர்க் ஷாப்புகள் காட்சிப்  பொருளாக வெறிச்சோடிக் கிடப்பதைக் காணலாம். எப்போதும் இரும்பு தகடுகளை வெட்டுவது, வளைப்பது, வெல்டிங் வைப் பது, ஆங்கிள்களை மடிப்பது, வெட்டுவது என இயந்திரங்கள் சத்தம் தொடர்ந்து இருந்து  கொண்டிருக்கும். ஆனால் இப்போது அத்த கைய சத்தம் கேட்பது குறைந்து போனது, சில  இடங்களில் நின்றுபோனது. இது குறித்து திருப்பூரில் இந்த கிரில்  ஒர்க் ஷாப் தொழிலில் இருபது ஆண்டுக ளுக்கு மேலாக தொடர்ந்து செயல்படக்கூடி யவர்கள் பலரிடம் பேசியபோது அனைவரும்  ஒரே குரலில் தொழில் மிக மோசமான நிலை யில் இருக்கிறது என்று வேதனையுடன் கூறி னர். எம்எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்  கூறுகையில், முன்பெல்லாம் 10 பேரை வைத்து இரவு பகலாக வேலை செய்து கொண்டிருந்தோம். ஆனால் இப்போது மூன்று பேர்தான் இருக்கிறார்கள். அவர்க ளுக்கும் வாரம் முழுவதும் ஒரு ஷிப்ட் வேலை  கூட கொடுக்க முடியவில்லை. கம்பெனி வேலைகள் சுத்தமாக இல்லை. கடைகள், வீடு கள் கட்டுவதும் குறைந்துவிட்டதால் அது சார்ந்த கிரில் கேட், ஜன்னல் போன்ற வேலைக ளும் வருவதில்லை. ஏற்கெனவே உள்ள கட்டி டங்களில் பழுதடைந்த கிரில் கேட்டுகளை சீர மைப்பது, மாற்றுவது போன்ற வேலைகள் பார்க்கும் நிலைதான் உள்ளது. புதிய கட்டி டங்களுக்கான வேலைகள் மிகவும் குறைவா கத்தான் உள்ளன.

இரும்பு தகடு, ஆங்கிள் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. மின்சாரக் கட்டணம் கடுமையாக அதிகரித்து விட்டது. அதிகமாக வேலை நடைபெற்ற கடந்த காலங்களில் கட்டிய மின்  கட்டணத்தை விட, இப்போது வேலையே இல்லாதபோதும் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் அதற் கேற்ற வருமானம் இல்லாதபோது என்ன செய்வதென்று தெரியவில்லை என்றார். கணக்கம்பாளையம் சண்முகசுந்தரம் கூறுகையில், தற்போது 60 சதவிகிதம் வேலை  குறைந்துவிட்டது. 10 பேர் வேலை செய்த எனது ஒர்க் ஷாப்பில் இப்போது இரண்டு பேர் தான் வேலை செய்கிறார்கள். மின் வெட்டு  ஒரு பிரச்சனையாக உள்ளது. ஒரு தொழிலா ளிக்கு ரூ.800-லிருந்து ரூ.1000 வரை சம்பளம்  தர வேண்டும். ஆனால் வேலை முழுமையாக  இல்லாததுடன், இருக்கும் வேலையை செய்வதிலும் மின் தடை பாதிப்பை ஏற்படுத் துகிறது. கிரில் ஒர்க்ஷாப் நடத்திய பலர் அவற்றை விட்டுவிட்டு வேறு வேலையைத் தேடி போகும் நிலை உள்ளது. சிலர் வாடகை தர  முடியாமலும், மின் கட்டணம் கட்ட முடியாம லும் ஒர்க் ஷாப்பை மூடிவிட்டு, ஒர்க் ஷாப் கரு விகள், உபகரணங்களுடன் வாடிக்கையா ளர் அழைக்கும் பகுதிக்குச் சென்று வேலை  செய்து கொடுத்து வருகின்றனர் என்றார். குறிப்பிட்ட சிலர் பெரிய பனியன் நிறு வனங்களில் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆண்டு முழுவதும் வேலை பெறுகின்றனர். ஆனால் அவர்களுக்கும் முன்பை விட வேலை அளவு குறைந்திருப்பதுடன், வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பதும் பாதிக்கப்படுகிறது என்று சிலர் தெரிவித்த னர். கிரில் வேலை தெரிந்த பல நூறு பேர்  இப்போது வேலை இல்லாமல் அன்றாட  வேறு கூலி வேலைக்குப் போய்க் கொண்டி ருக்கின்றனர். குறைந்தபட்ச வாழ்க்கை உத்த ரவாதம் இல்லாதவர்களாக இந்த தொழிலில்  வேலை செய்த தொழிலாளர்கள் மாற்றப்பட் டுள்ளனர். கிரில் ஒர்க் ஷாப் நடத்தியவர்கள்  நிலையும் இதே போல் நலிவை நோக்கித்தான்  உள்ளது என்று வேதனையுடன் தெரிவிக்கின் றனர். மோடி அரசின் தொழில், பொருளாதாரக் கொள்கைகள் சமூகத்தின் பார்வையில் நேரடி கவனம் பெறாத இதுபோல் எண் ணற்ற பிரிவினரை சீரழித்துள்ளது என்ப தற்கு திருப்பூர் கிரில் தொழில் நிலை ஒரு எடுத் துக்காட்டு ஆகும். (வே.தூயவன்)