districts

img

பயிற்சி மருத்துவர் வன்கொலை: அரசு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 02- மேற்கு வங்கம் மாநிலத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, படு கொலை செய்யப்பட்டதை கண் டித்து திருப்பூர், உடுமலை ஆகிய பகு திகளில் திங்களன்று அரசு ஊழி யர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப் பாட்டம் நடத்தினர். மேற்குவங்க மாநிலம் கொல்கத் தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை 2 ஆம் ஆண்டு மருத்து வம் பயின்று வந்த மாணவி, கடந்த  ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு பாலியல் வன்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயலை செய்த குற்றவாளிகளை அனைவரையும் உடனடியாக கண்டுபிடித்து தகுந்த தண்டனையை வழங்க வேண்டும். இது போன்ற குற்ற செயல்கள் வேறு  எங்கும் நடந்திடாதவண்ணம் பெண் குழந்தைகள், மாணவியர்கள், பெண் ஊழியர்கள் என ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் மாவட்ட இணைச் செய லாளர் எஸ்.ராணி தலைமையில் திங் களன்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத்தலைவர் எ.ராணி, மாவட்ட  இணைச் செயலாளர் ஆர்.ராமன்  ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் மாவட்ட துணைத்தலை வர் பாண்டியம்மாள் நன்றி கூறி னார். உடுமலை: அதேபோல உடுமலை வட்டாட்சி யர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர்  மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரம ணியன் தலைமையில் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், பெண்கள் மற்றும் குழந் தைகள் மீதான வன்முறைகளை தடுக் கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் பணியிடங்களிள் பெண்க ளின் உரிமைகளையும், பாதுகாப்பை யும் உத்தரவாதப்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்கொடுமை தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது கடுமையான தண்டனை கிடைக்க ஒன்றிய மற்றும்  மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பட்டது. இதில், மாநிலச் செய லாளர் அம்சராஜ் கண்டன உரையாற் றினார். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் புஷ்பவள்ளி, கோவை மாவட்ட துணைத்தலைவர் ஜெக நாதன், ஈரோடு மாவட்ட துணைத் தலைவர் செந்தில்நாதன், வரு வாய்த்துறை சங்கத்தின் சிவக்கு மார், சங்கத்தின் நிர்வாகிகள் தேவி,  எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் வட்டக்கிளைச் செயலாளர் வெங்கி டுசாமி நன்றி கூறினார்.