districts

img

யு.ஜி.சியின் 2025 வரைவு மசோதா: அரசு கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன.28- யு.ஜி.சி 2025 வரைவு மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் செவ்வாயன்று கல்லூரி வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யு.ஜி.சி 2025 இல் வரவறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  இதில், எல்லா வித பொறுப்புகளும் யு.ஜி.சி க்கு  மாற்றப்பட்டு உள்ளது. அப்படியானால்  தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி  மற்றும் பல்கலைக் கழகங்களிலும், யு.ஜி.சி சொல்வதைப் போலவே நடந்து  கொள்ள வேண்டும். பி.ஜி படிக்காம லேயே ஒரு கல்லூரியில் அல்லது பல் கலைக் கழகத்தில் ஆசிரியரை நியமிக்க லாம். தகுதியே இல்லாதவர்களால், ஏழை, எளிய மாணவர்கள் மிகவும் சிர மத்திற்கு உள்ளாவார்கள். மேலும், இளங்கலை, முதுகலை எதுவானா லும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என் கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வு மாண வர்களை முழுமையாக கல்லூரி பக்கம் வர விடாமல் செய்து விடும். தமிழக  அரசையும் மிரட்டுகிறார்கள். நாங்கள்  கூறுவதை பின் தொடரவில்லை என் றால் பட்டங்கள் செல்லாது என அறி விக்கிறோம் என்கிறார்கள். கல்லூரிக ளுக்கும் பேராசிரியர்களுக்கும் பணம் கொடுப்பது தமிழக அரசு, ஆனால் இவர்கள் நாங்கள் சொல்லும் விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் போன்ற விதிமுகள் உள்ளதால், இதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் திரளான பேரா சிரிகள் பங்கேற்றனர்.