districts

img

விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்!

மேட்டுப்பாயைளம், ஆக.31- கிராமப்புற அரசு பள்ளி மாண வர்களை விமானத்தில் சென் னைக்கு அழைத்து சென்ற ஊராட்சி  தலைவரின் செயல் பொதுமக்களி டையே பெரும் வரவேற்பை பெற் றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது சிக்காரம்பாளையம். இந்த கிராம ஊராட்சியில் உள்ள கண் ணார்பாளையம் அரசு ஆரம்ப மற் றும் தொடக்க பள்ளிகளில் ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புற மாண வர்கள் கல்வி பயின்று வருகின்ற னர். இம்மாணவர்கள் பெரும்பா லும் தங்கள் ஊரை விட்டு வெளி யில் அதிகம் செல்லாதவர்கள். இவர்களுக்கு விமானம் என்பது வானில் பறந்து செல்லும் போது வேடிக்கை பார்க்கும் ஒரு எட்டாத கனவு எனலாம்.  இந்நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை சிக் காரம்பாளையம் ஊராட்சித் தலை வர் ஞானசேரகன் தலைமையில் கோவையிலிருந்து சென்னைக்கு  விமானம் மூலம் சனியன்று காலை அழைத்து சென்றுள்ளார். சென்னையில் காலை உணவுக்கு பின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அண்ணா நூலகம் மற்றும் அறிவியல் கோளரங்கம் உள்ளிட்ட பயனுள்ள பகுதிக ளுக்கு சுற்றுலா அழைத்து சென்று சுற்றிக்காண்பிக்கவும் அதன் விப ரங்களை கற்றுத் தரவும் உள்ள னர். 75 மாணவ, மாணவியர்கள், பெற்றோர் தரப்பில் 75 பேர்  மற்றும் இவர்களை வழிநடத்த 15 ஆசிரியைகள் என விமானத்தில் சென்றுள்ளனர். ஏழை கிராமப்புற மாணவர் களை ஊக்குவிக்கும் விதமான ஊராட்சி தலைவரின் இச்செயல் இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள் ளது.