கோவை, செப்.17- விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞ ரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட தையடுத்து, அரசு மரியாதையுடன் உடல் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா கடத்தூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் இருசக்கர வாக னத்தில் சென்ற போது எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டு தலை யில் பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து, கார்த்திக் ராஜா வின் உடல் உறுப்புகளை செவ்வாயன்று தானம் செய்ய அவர்களது உறவினர்கள் முன்வந்தனர். தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது உடலுக்கு தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அரசு மரியாதை செய்தனர்.