districts

img

ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கோவை, ஆக. 26- சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் ரூ. ஒரு கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகி றது. காலை 3 மணியளவில் கோவை வரும் விமானம் மீண்டும் அதிகாலை 4 மணியளவில் ஷார்ஜாவுக்கு புறப்பட்டு செல்லும். இந்நிலையில், சார்ஜாவில் இருந்து திங்களன்று காலை ஏர் அரே பியா விமானம் கோவை விமான நிலை யத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் பயணிகளையும், பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர். பின்னர், விமானத்தின் உட்பகு தியிலும் சோதனை ஈடுபட்டனர். அப் போது, விமான இருக்கை ஒன்றின் பக்க வாட்டில் இருக்கும் உட்பக்க பேனலில் மூன்று பாக்கெட்டுகளில் தங்கக் கட்டி கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது தெரிய வந்தது. ஒரு கோடி ரூபாய் மதிப் பிலான தங்க கட்டிகளை சுங்க வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், தங்க கட்டிகளை பரிசோதித்த போது அது 1399 கிராம் எடையில் தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. பய ணிகள் யாரும் அதற்கு உரிமை கோராததால் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.