நாமக்கல், ஆக 23- சிறுமியை வெட்டிக்கொலை செய்த வழக் கில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு நிவாரணத் தொகை ரூ 25 லட்சம் வழங்க வேண்டும் என வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருச்செங்கோடு அருகே சத்தியநாயக் கன் பாளையத்தில், கட்டிட தொழிலாளி பிரபு (35) மேகலா (30) இவர்களது மூத்த மகள் தஸ்மிதா (11) இரண்டாவது மகள் வர்ஷிதா (3) என உள்ளனர். இதே பகுதியில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் செந்தில் குமார் வீடு உள்ளது. இந்நிலையில் கடந்த 27 ஆம்தேதி, செந் தில்குமார் (45) வீட்டின் முன்பு பிரபுவின் உறவி னர்கள் குடியிருந்து வருவதால் ஐந்து பேர் சென்று விளையாடிக் கொண்டிருந்தனர் அப்பொழுது செந்தில்குமார் குழந்தைகளை வீட்டில் அடைத்து பூட்டி வைத்துள்ளார். இதில் ஒரு சிறுவன் கதவை திறந்து 4 பேருடன் தப்பி ஓடினார். இதனால் ஆத்திரம டைந்த செந்தில்குமார், தஸ்மிதா என்ற சிறுமியை கத்தியால் கழுத்தில் வெட்டினார். சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்து வந்த முத்துவேல், தங்கராசு மற்றும் உறவினர்கள் சென்றபோது வீட்டுக்குள் வந்தால் குழந் தையை கொன்று விடுவேன் என்று கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினார். குழந்தையை காப்பாற்ற வந்த முத்து வேல். தங்கராஜ் ஆகியோரையும் துரத்தி சென்று வெட்டினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,செந்தில் குமாரை கைது செய்து, சிறுமியை மீட்டு சேலம் தனியார் காவேரி மருத்துவமனை யில் சேர்த்தனர். பின்னர், அச்சிறுமி கவலைக் கிடமாக இருந்த நிலையில் வியாழனன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிபிஎம் ஆர்ப்பாட்டம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு செலவில் சிகிச்சைக்கான முழு செலவு தொகை உட்பட ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளி யன்று நாமக்கல் மாவட்டம் குமரமங்க லத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சுரேஷ். தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன், மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றிய கவுன்சி லர் சு.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர். எஸ். தமிழ்மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.