districts

img

எரிவாயு உருளை வெடித்து தொழிலாளி மரணம்

உயிருக்கு உத்தரவாதம் அளித்திடுக

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் காப்பரேசனின் எல்பிஜி பிளாண்டில் எரிவாயு உருளை வெடித்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க  வேண்டுமென சிஐடியு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இந்தியன்  ஆயில் கார்ப்பரேசன் எல்பிஜி பாட்டிலிங் பிளாண்ட் செயல்பட்டு வருகிறது. இதில் சந்தோஷ் என்ஜினியரிங் சர்வீஸ் என்ற ஒப்பந் தாரரின் கீழ் சரவணன் (23) தொழிலாளி பணியாற்றி வந்தார்.  இந்நிலையில், எரிவாயு உருளை வெடித்ததில் சரவணன் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சரவண னுக்கு திருமணமாகாத நிலையில் வயதான தாய், தந்தை உள்ளனர்.  அவர்களால் சுயமாக இயங்க முடியாது. அவர்களுக்கு வேறு எந்த வருமானமுமில்லை.  எனவே, அவரது குடும்பத்திற்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க  வேண்டும். மேலும் எஸ்டி, எச்ஆர், புது சிலிண்டர்களை முறையாகக்  கையாள உரிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கையாள  வேண்டும். பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம்  அளிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ரூ.10லட்சம் காப்பீடு செய்து  தர வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு பெட்ரோலியம் மற்றும் கேஸ்  ஒர்க்கர்ஸ் யூனியன் கேட்டுக் கொண்டுள்ளது.

ஈரோடு, ஜன. 11- ஐஓசி நிறுவனத்தில் எரிவாயு உருளை வெடித்து இறந்த தொழி லாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி சிஐடியு  சார்பில் ஆலை முன் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மேல்கோம்பையைச் சேர்ந்தவர் சரவணன் (22). இவர்  ஈரோடு மாவட்டம், பெருந்துறை  அருகே சின்ன மடத்துப்பாளை யத்தில் தங்கி சிப்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் கம்பெனியில் வேலை செய்து வந்தார். பி.காம் பட்டதாரியான சரவணன் கடந்த 1.5 ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிலையில் வழக்கம்போல் செவ்வாயன்று பிற்பகல் 2  மணிக்கு  வேலைக்குச் சென்றார்.  லோடிங் பிரிவில் வேலை செய்த நிலையில் இரவு 8 மணியளவில் 19 கிலோ எடையுள்ள எரிவாயு உருளை வெடித்து அவரின் மார்பு மற்றும் தாடையில் அடித்து தூக்கி வீசப்பட்டார்.

அருகிலிருந்தவர்கள் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சரவணன் உயிரி ழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பெருந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பெருந்துறை சிப்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தொழிற் சாலையில் ஒப்பந்த தொழிலாளி எரிவாயு உருளை வெடித்து இறந்த சரவணனின்  குடும்பத்திற்கு ரூ. 1கோடி இழப்பீடு வழங்க வேண்டும்  என வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு பெட்ரோல் கேஸ் ஒர்க்ர்ஸ்  அசோசியன் உதவிச் செயலாளர் டி. சேகர் தலைமை வகித்தார். சிஜடியு  தலைவர் கே.குப்புசாமி, சிஜடியு  தாலுகா செயலாளர் எஸ்.என். மயில்சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரம சிவம், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் வி.ஏ.விஸ்வநாதன் ஆகி யோர் உரையாற்றினர். கிளை  தலைவர் சுரேஷ், செயலாளர்  மாணிக்கசுந்தரம், நிர்வாகிகள்  ஜெகநாதன், பாலசுப்பிரமணி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.