districts

img

உடுமலையில் பழங்குடி மாணவர்களுக்கு இலவச சிலம்பப் பயிற்சி

உடுமலை, ஜூலை 13- உடுமலை பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் பழங்குடி மாணவர்களுக்கு இலவச  சிலம்பப் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டு உள்ளது. மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு சனியன்று இலவச சிலம்பப் பயிற்சி வகுப் புகள் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக சமூக ஆர்வலர் ரமேஷ் மற்றும் உடுமலை தொழில்  மைய ஆலோசகர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண் டனர். மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி காப்பாளர்  புருஷோத்தமன் தலைமையில் இலவச சிலம்பப் பயிற்சிகள்  நடைபெற்றது.  இதேபோல் உடுமலை அரசு பெண்கள் மாணவியர் விடுதி யிலும் சிலம்பப் பயிற்சி துவக்கப்பட்டது. மாணவியருக்கு தன் னம்பிக்கை அளிக்கும் விதத்தில் நடத்தப்படும் இலவச சிலம் பப்பயிற்சி துவக்க விழாவிற்கு விடுதி காப்பாளர் ஹேமா தலைமை வகித்தார். நூலகர் கணேசன், திருப்பூர் மாவட்ட  தொழில் மைய வள ஆலோசகர் மணிவாசகம், சமூக ஆர்வலர்  ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிலம்ப ஆசான் வீரமணி பயிற்சிகளை வழங்கினார்.