districts

img

செப்.30 வரை இலவச பூஸ்டர் தடுப்பூசி-சுகாதாரத்துறை தகவல்

கோவை, செப்.9- செப்.30 ஆம் தேதி வரை மட்டுமே கொரோனாவிற்கான  பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என  கோவை சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித் துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போது மானது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த்தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்ததால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக 60  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. 18 முதல் 59 வயதுக்கு உள்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம்  செலுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள  பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து, தமிழகத்தில் 18 முதல் 59 வயதுக்குட் பட்டவர்களுக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜூலை 15 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. ஜூலை  15ஆம் தேதி முதல் அடுத்த 75 நாள்களுக்கு அரசு ஆரம்ப  சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில்  பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பூஸ்டர் தடுப்பூசி செலுத் துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில், செப்.30 ஆம் தேதி வரை மட்டுமே இலவ சமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 29 லட்சத்து 12 ஆயிரத்து 580 பேரும், இரண் டாவது தவணை தடுப்பூசியை 26 லட்சத்து 70 ஆயிரத்து 84 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால், பூஸ்டர்  தடுப்பூசியை 2 லட்சத்து 49 ஆயிரத்து 107 பேர் மட்டுமே  செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசிகள்  செலுத்திக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது பூஸ்டர் தடுப்பூசியை மிகவும் சொற்பமான நபர்களே செலுத்திக் கொண்டுள்ளனர்.  செப்.30 ஆம் தேதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவச மாக செலுத்தப்படும் என்பதால், பூஸ்டர் தடுப்பூசி  செலுத்திக் கொள்ளதாவர்கள் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும், என்றனர்

;