கோவை, செப்.19- தமிழ்நாட்டில் 40 ட்ரக்கிங் சாலைகள் கண்டறியப்பட்டுள்ளது, இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரியில் 27 ஆவது மாநில அளவிலான வனத்துறை விளை யாட்டுப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் 12 மண்டல வனத்துறையை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதி வேந்தன் வியாழனன்று துவக்கி வைத் தார். இந்நிகழ்வில் பங்கேற்று அமைச் ்சர் மதிவேந்தன் பேசுகையில், 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் அகில இந்திய வனத்துறை விளையாட் டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. 8ஆவது அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்நிலை யில் 28 ஆவது அகில இந்திய வனத் துறை விளையாட்டுப் போட்டிகள் தமிழ கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்றார். மேலும், அவர் பேசுகையில், 2022 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரை ரூ. 920.52 கோடி ஜப்பான் நாட்டு நிதி உதவி செல வில் தமிழ்நாடு உயிர் பன்மையி யல் பசுமையாக்கும் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அகழிகள், செயற்கை நுண்ணறிவு கருவிகள், செயற்கை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை பாலக் காடு ரயில்வே வழித்தடத்தில் யானை உயிரிழப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. மனித வன விலங்கு மோதல்கள் பல்வேறு நடவடிக்கைகள் திட்டங்கள் மூலமாக தடுக்கப்பட்டுள் ளது. தமிழ்நாட்டின் வனப்பரப்பை 10 ஆண்டுகளில் 23.76 சதவீதத்தில் இருந்து 33 சதவிகிதமாக அதிகரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற் காக 260 கோடி நாட்டு மரங்களை நட்டு கால சூழ்நிலையை கண்டறிந்து பல் வேறு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது என்றார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், யானை வழித்தடங்கள் எங்கே இருக்கிறது என் பதை கண்டறிந்து ஆராய்ந்து வரு கின்றோம். யானைகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இந்த அரசு வனவிலங்குகளை எந்த அள விற்கு பாதுகாக்கிறது என்பதற்கான அறிகுறி தான் இது. மனித வனவி லங்கு மோதல் அதிகம் உள்ள இடங்க ளில் தனி கவனம் செலுத்தி, அந்தந்த மாவட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின் றது. மனித விலங்கு மோதலால் ஏற்படும் விளைவுகளுக்கு நிவாரணத்தை முத லமைச்சர் அதிகப்படுத்தியும், விரைவு படுத்தியும் இருக்கிறார். யானைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறா மல் இருப்பதற்கு தற்பொழுது பல்வேறு நவீன கருவிகள் வந்திருப்பதை குறிப் பிட்ட அமைச்சர் இவற்றை கோவை வனப்பகுதியில் வைத்து ஆய்வு செய்து, வனத்துறை நிதியில் பல்வேறு புதிய நவீன கருவிகளை வாங்கி ஒவ் வொன்றாக பணிகளை மேற்கொள்ள லாம். தமிழ்நாட்டில் 40 ட்ரக்கிங் சாலை களை கண்டறிந்துள்ளனர். விரைவில் விளையாட்டு துறை அமைச்சர் அதனை திறந்து வைக்க உள்ளார். அது குறித் தான விவரங்கள் ஆன்லைனில் தெரி யப்படுத்தப்படும் என்றார்.