உதகை, பிப்.20- உதகை, மார்லிமந்து வனப்பகுதியில் 2 மணி நேரம் காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் தீக்கிரையானது. கோடைக்கு முன்னரே இந்த ஆண்டு நீலகிரியில் காட்டுத் தீ தொடங்கி விட்டது. நீலகிரியில் வழக்கமான குளிர் காலநிலை மாறி, தற்போது பகல் நேரங்களில் அதிக வெப்பம் நிலவுகிறது. இதற்கிடையே கடந்த டிசம் பர் மாதத்தில் ஏற்பட்ட உறை பனி பாதிப்பு காரணமாக வனப்பகுதி முழு வதும் பல இடங்களில் காய்ந்து கருகி கிடக் கிறது. எனவே இந்த ஆண்டு நீலகிரியில் தீ விபத்து பாதிப்புகள் ஏற்பட்டால் சமாளிப்ப தற்கான நடவடிக்கைகளை வனத்துறையி னர் ஏற்கனவே தொடங்கிவிட்டனர். இதன் ஒரு பகுதியாக வனப்பகுதியின் பல இடங்களி லும் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. வறட்சி ஏற்படும் பகுதிகளில் வன விலங்குகளுக்காக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளை தொடங்க உள்ளனர். ஆனாலும் அவ்வப்போது ஆங்காங்கே லேசான காட்டுத்தீ ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், புதனன்று மார்லிமந்து அணையை ஒட்டியுள்ள உதகை நகராட்சிக்கு சொந்தமான வனப்பகுதியில் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டது. தீ மளமளவென அப்பகுதி யில் முழுவதும் பரவியது. தீ விபத்து ஏற் பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த உதகை வனச்சரகத்தை சேர்ந்த வனப்பணியாளர்கள் சம்பவ இடத் திற்கு சென்று காட்டுத்தீயை அணைக்க முயற்சி செய்தனர். 2 மணி நேரம் வரை எரிந்த இந்த காட்டுத்தீயால் சுமார் 5 ஏக்க ரில் இருந்த முட்செடிகள், புற்கள் தீக்கிரை யானது. ஒரு சில கற்பூர மரங்களும் இதில் எரிந்துவிட்டன. கோடைகாலம் தொடங்கும் முன்னரே இந்த ஆண்டு காட்டுத்தீ நீலகிரி யில் தொடங்கிவிட்டது. காட்டுத்தீ ஏற்பட்ட வனப்பகுதியில் கடமான்கள், செந்நாய் கூட்டம், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அதி கமாக சுற்றி திரிந்து வரும் இடம் என்ப தும் தவிட்டு பழம் உள்ளிட்ட முக்கிய பழங்கள் விலையும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகை யில், காட்டுத்தீ அபாயம் நீலகிரியில் தொடங் கிவிட்டது. வனப்பகுதியில் யாரும் அத்து மீறி நுழையக்கூடாது. தீப்பிடிக்கும் பொருட் களை எடுத்துச் செல்லக்கூடாது, காட்டுத்தீ ஏற்பட்டால் அருகில் செல்ல வேண்டாம் மூச் சுத்திணறல் பாதிப்பு ஏற்படும் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண் டும், என்றனர்.