districts

img

நவமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு

கோவை, டிச.14- பொள்ளாச்சி அருகே  உள்ள நவமலை ஆற்றில்  திடீர் வெள்ளப்பெருக் கால், பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக் கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப் பகம் பொள்ளாச்சி வனச்ச ரக பகுதிக்குட்பட்ட நவ மலையாகும். இப்பகுதி யில் மின்சாரம் ஊழியர் குடியிருப்பு மற்றும் மலை வாழ் மக்கள்  300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் தினசரி அருகில் உள்ள தோட்டங்களுக்கும், கூலி வேலைக்கும் சென்று வரு கின்றனர். மேலும், அப்பகுதி குழந்தைகள் ஆழியார் மற்றும் கோட் டூர் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று வருகின்றனர். தற் போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், அப்பர் ஆழியார், காடம்பாறை நீர்  பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகமாகி தற்போது அப்பர்  ஆழியாரில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால்,  நவமலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகு தியில் உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதன்காரண மாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் அத்தி யாவசியப் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலையும், அரசு  பேருந்து வசதிகள் நிறுத்தப்பட்டதால், பள்ளிக்கு செல்ல முடி யாத நிலையயும் ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் வரத்து அதிக மாக உள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.