கோபி, மே.20- நம்பியூர் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இரண்டாவது நாளாக கனமழை யால், நீர்நிலைகள் நிரம்பி ஓடைகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. ஈரோடுமாவட்டம் கோபி அடுத்த நம் பியூர் சுற்றுவட்டார பகுதிகளான சந்தன நகர், ராஜீவ்காந்திநகர், இச்சிபாளை யம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிறு மாலை கனமழை கொட்டி தீர்த் தது. இதனால், சந்தனநகர் குட்டை நிரம்பி உடைப்பு ஏற்பட்டு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடு களில் வெள்ளம் புகுந்தும் ஆண்டி காடு பகுதியில் ஆடு, மாடுகளை அடித் துச்செல்லும் முன் அப்பகுதியினர் உடனே கால்நடைகளை உயர்வான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். தொடர்ந்து வெளியேறிய வெள்ளத் தால் அப்பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பின. இதனைதொடர்ந்து, திங்க ளன்று நம்பியூர், வரப்பாளையம், சந்த னநகர், வேமாண்டம்பாளையம், கோரக்காடு, உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் இரண்டாவது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் ஓடைகளில் பெருக்கெ டுத்துள்ளது. தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கோமாங்காட்டுபா ளையம் குளம் நிரம்பி பழனிகவுண் டன்புதூர், செட்டியம்பதி குளத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இத னால், தாழ்வான பகுதிகளில் உள்ள பிலி யம்பாளையம், செட்டியம்பதி, பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிக ளில் வெள்ளம் சூழும் வாய்ப்பு உள்ள தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.