கோவை, செப்.4- கேபிஆர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. கோவை மாவட்டம், கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியிலுள்ள 12 இளங்கலை பொறி யியல் துறைகளில், செயற்கை நுண்ணறிவியல், இயந்தி ரக் கற்றல், உயிர்மருத்துவப் பொறியியல், மின்னணுவி யல், தகவல் தொடர்பியல், கணினி அறிவியல், வணிகப் பகுப்பாய்வியல், செயற்கை நுண்ணறிவியல், தரவு அறிவியல், மற்றும் இயந்திரப் பொறியியல் ஆகிய துறைகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா புதனன்று நடைபெற்றது. இன்செப்ஷன் ‘24 என்ற பெயரில் நடைபெறும் இரண்டு நாள் தொடக்க நிகழ்ச்சியின் முதல்நாள் விழா வில் இந்த துறைகளுக்கான தொடக்க விழாவும், நாளை இரண்டாம் நாள் நிகழ்வில் மற்ற 6 துறைகளுக்கான தொடக்க விழாவும் நடைபெற உள்ளது. இந்த முதல் நாள் நிகழ்விற்கு கேபிஆர் குழுமத் தின் தலைவர் முனைவர் கே.பி.ராமசாமி தலைமை வகித் தார். சிறப்பு விருந்தினர்களாக கார்கில் நிறுவனத்தின் சர்வதேச மனிதவள தலைவர் வி.நடராஜ பெருமாள் மற்றும் ஆரக்கல் நிறுவனத்தின் துணைத் தலைவர் பாலாஜி துரைசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் த.சரவணன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் பேசிய கல்லூரியின் தலைவர் டாக்டர் கே.பி இராமசாமி, கல்லூரியில் பல்வேறு துறைகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த துறை களில் முழு ஈடுபாட்டுடன் ஆர்வத்துடன் படித்தால் அந்த துறையில் மிக உயர்ந்த இடத்தை எட்ட முடியும். அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இக்கல்லூரி செய்து கொடுக்கும். மேலும், ஒவ்வொரு பெற்றோருக் கும் தங்கள் மாணவர்களை உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற கனவாக இருக்கும், எனவே பெற் றோர்களின் ஆசையை நிறைவேற்றுவது மாணவர் களாகிய உங்களின் கடமை என்றார். இதில், முதலாமாண்டு துறைத் தலைவர்கள், சம் பந்தப்பட்ட துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதலா மாண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.