districts

குறைதீர் கூட்டத்தில் முதல்நிலை: அலுவலர்கள் பங்கேற்க உத்தரவு

சேலம், ஜூன் 14- மாவட்ட ஆட்சியரகத்தில் திங்க ளன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டத்தில் முதல்நிலை அலுவ லர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என சேலம் ஆட்சியர் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், பொதுமக்க ளுக்கு வழங்கப்படும் அரசின் சேவை கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிப் படை வசதிகள் குறித்த தேவைகள் இருப்பின், அதனை ஆட்சியரகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  பொதுமக்கள் மனுக்களாக அளித்து வருகின்றனர். இம்மனுக்கள் உடனடி யாக கணினியில் பதிவேற்றம் செய்யப் பட்டு, மனுதாரர்களுக்கு இதற்கான உரிய ரசீது வழங்கப்படுவதுடன், பொது மக்களின் மனுக்களின் மீது தொடர்பு டைய துறை அலுவலர்களால் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்துவரும் திங்கட்கிழமைக் கான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் திற்கு முன்னதாக, மாவட்ட ஆட்சிய ரால் ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. வரப்படும் பொதுமக்களின் தகுதியான மனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு  காணப்பட்டு வருகிறது. இப்பணியினை  மென்மேலும் சிறப்பாக செயல்படுத்தி டும் வகையில், திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு அனைத்துத் துறை யின் முதன்மை அலுவலர்கள் மட்டுமே  கலந்துகொள்ள வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.