districts

img

பட்டாசு குடோனில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சேலம், செப்.4- அயோத்தியாப்பட்டணம் அருகே செயல்பட்டு வந்த பட் டாசு குடோனில் ஏற்பட்ட வெடி  விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சிவ காசியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர், சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அருகே உள்ள பருத்திக்காடு, கோமாளி வட்டம் பகுதியில் பட்டாசு குடோன் நடத்தி வந்தார். அனு மதி பெற்று நடத்தப்பட்டு வந்த இந்த பட்டாசு  குடோனில், புதனன்று காலை நாட்டு வெடி களை இறக்கி வைக்கும் பொழுது, கைத் தவறி ஒரு முட்டை கீழே விழுந்து திடீரென  வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பணி யிலிருந்து ஜெயராமன் இந்த விபத்தில் சிக்கி  படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து அங் கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தபோதே, உயிரிழந்தார். மேலும் இவ்விபத்தில் படு காயமடைந்த 4 பேர், சேலம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிக்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனி டையே, இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை முற்றிலுமாக அணைத்தனர். பட்டாசு குடோன் செயல்பட்ட பகுதி ஊருக்கு வெளி யில் ஒதுக்குப்புறமாக இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து வீராணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.