districts

img

பணி நிரந்தரம் கேட்டு பெடரல் வங்கி ஊழியர்கள் தர்ணா!

சேலம், ஜூலை 27- தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியு றுத்தி, சனியன்று பெடரல் வங்கி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடங்களாக பெடரல் வங்கி நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத  போக்கினை கண்டித்து, பெடரல் வங்கி ஊழி யர் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எழுத்தர்கள், துணைநிலை ஊழியர்கள், தூய் மைப் பணியாளர்களுக்கான காலிப் பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தற் காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி  நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிற்சங்கத்து டனான ஒப்பந்தங்களை மீறுவதை நிறுத்தி விட்டு, தொழிலாளர் சட்டங்களை மதித்து ஊழியர்களுக்கு எதிரான பழிவாங்கும் போக் கினை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பெடரல் வங்கி ஊழி யர் சங்கத்தினர் சனியன்று மாநிலந்தழுவிய தர்ணாவில் ஈடுபட்டனர். சேலம் அழகாபுரம் பகுதியிலுள்ள பெட ரல் வங்கி பிராந்திய அலுவலகம் முன்பு நடை பெற்ற தர்ணாவில், பெடரல் வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் விஷால் தாக்கர், பொதுச் செயலாளர் சுஜித் ராஜூ, செயலாளர் சுஜித்,  வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செய லாளர் சம்பத் மற்றும் சகோதர சங்க தலை வர்கள் உட்பட திரளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.