districts

img

6 ஆம் நம்பர் பீல்ட் சாலையை தார்ச்சாலையாக அமைத்திடுக

சேலம், ஜன.31- ஏற்காடு அருகே உள்ள மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம பழங்குடி மக்க ளின் பயன்பாட்டில் உள்ள 6 ஆம் நம்பர் சாலையை தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என வலியுறுத்தி ஊர் பொதுமக் கள் மற்றும் சிஐடியு சார்பில் உண்ணாவிரத இயக்கம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி, மார மங்கலம் சிற்றூராட்சி பகுதியில் உள்ள கொட் டச்சேடு முதல் அரங்கம் வரையான 18 கிராம மக்களின் 35 ஆண்டு கோரிக்கையான 6 ஆம் நம்பர் பீல்ட் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் பல கட்டமாக போராடி வருகின்றனர். இருப் பினும் மாவட்ட நிர்வாகம் 7 ஆம் நம்பர் பீல்ட்  சாலை அமைத்துள்ளது. இதனால் 18 கிரா மங்களுக்கு பயனளிக்காமல் ஒரே ஒரு கிரா மத்திற்கு மட்டும் அந்த சாலை பயனுள்ளதாக உள்ளது. சாலை அமைக்கும் இடம் எஸ்டேட் என்பதால் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதர வாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வரு கிறது என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சிய ராக இருந்த செ.கார்மேகம் பொதுமக்க ளுக்கு பயன் தராத வகையிலும், எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் 7 ஆம் நம் பர் பீல்ட் சாலையை அமைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் 6 ஆம் நம்பர் பீல்ட் சாலையை மாவட்ட நிர்வாகம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிஐடியுவினர் ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் உண்ணாவிரத இயக்கத்தில் ஈடு பட்டனர். செந்திட்டு ஊர் நிர்வாகி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந் தன் துவக்கி வைத்தார். இதில் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.இளங்கோ, மாரமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் எ.மாதையன், ஊராட்சி கவுன்சிலர் வருதாயி ரவிக்குமார், சிபிஎம் தாலுகாச் செய லாளர் நேரு உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் நிறைவுரையாற்றினார். அப்போது, தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற மறுக்கும்  பட்சத்தில் ஆதார், ரேசன் அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக் கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்த னர். இக்கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு தலைமையில் தொடர் போராட்டம் நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.