உடுமலை, டிச.3- திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம ராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை படிப் படியாக முடக்கப்படுவது, நஷ்டத் தைக் காரணம் காட்டி தனியாருக்குத் தர முயற்சி நடைபெறுவதாக விவசாயிக ளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது. தமிழகத்தில் முதலில் தொடங்கப் பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை இது. தற்பொழுது அரசின் நடவடிக்கையால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள் ளது. 1960ஆம் ஆண்டு அன்றைய தொழில் நுட்பத்தின்படி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு நாள் ஒன்றுக்கு 1,250 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டதாக இயங்கத் தொடங்கியது. பின்னர் 1995ஆம் ஆண்டு இந்த ஆலை யின் கழிவுகளில் இருந்து எரிசாரா யம் தயாரிக்கும் ஆலையும் தொடங்கப் பட்டது. பழைய இயந்திரங்கள் இந்த ஆலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை அரவை பருவமாகும். தொடர்ந்து 60 ஆண்டுகளைக் கடந்து இயங்கும் இயந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் ஆலையின் உற் பத்தி பாதிக்கப்பட்டது இதனால் ஆலை யைத் தொடர்ந்து இயக்க முடியாமல் நிதி நெருக்கடி உருவாகியது. தொழிலாளர்களுக்கு சீராக சம்ப ளம் வழங்கப்படுவதில்லை. இதற்குத் தீர்வாக புதிய இயந்திரங்களைப் பொருத்தி ஆலையைப் புதுப்பிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இங்குள்ள இயந்திரங்களில் முக்கிய மாற்றம் எதுவும் செய்யாமல் 1978ஆம் ஆண்டு சிறிய அளவில் மாற் றம் செய்யப்பட்டு, உற்பத்தி அதிகரிக் கப்பட்டது. எனினும் கரும்புகளை எடை மேடையில் இருந்து அரவைக்குக் கொண்டு செல்ல புதிய இயந்திரங்கள் (கன்வெயர்) இல்லை. மேலும் இயந் திரங்களில் பழுது ஏற்பட்டால் உடனடி யாக சரி செய்யப் போதிய உதிரிபாகங் கள் மற்றும் அதற்கான தொழில் நுட்பங் ்கள் இல்லாததால், மீண்டும் ஆலையை இயக்க அதிக நாட்கள் காலதாமதம் ஏற் படுகிறது. கரும்புச்சாறுகளை பாது காப்பாக வைத்து கொள்ளவும் முடி யாத நிலையால், தரமான சர்க்கரை கிடைப்பதில்லை. இதனால் ஆலைக் குத் தொடர் இழப்பு ஏற்பட்டது. வறட்சி காலத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இந்த ஆலையை, காலத்திற்கு ஏற்றார்போல் நவீனப்ப டுத்தாமல் இருப்பதால் விவசாயிகள் மற்றும் ஆலை தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை யைப் புதுப்பித்து விவசாயிகளையும், ஆலைத் தொழிலாளர்களையும் பாது காக்க வேண்டும் என்பதே அனைவ ரின் கோரிக்கை. படிப்படியாக முடக்கம் இந்நிலையில் நடப்பு ஆண்டு விவ சாயிகளிடம் கரும்புகளைப் பதிவு செய்ய வேண்டும். வழக்கமாக ஆலை நிர்வாகம், விவசாயிகளின் கரும்பு களை பதிவு செய்ய பல்லடம், தாரா புரம், பழனி, கணியூர், கொமரலிங்கம் மற்றும் நெய்க்காரபட்டி ஆகிய இடங்க ளில் தனி அலுவலகத்தை வைத்தி ருந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டு இந்த அனைத்து அலுவலகங்களையும் மூடி விட்டு கிருஷ்ணாபுரத்தில் இருக்கும் ஆலையில் செயல்படும் அலுவலகத் தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலையில் வேலை செய்து வந்த அலு வலர்கள் மற்றும் பணியாளர்களை வேறு ஆலைகளுக்கு பணி மாறுதல் அடிப்படையில் அனுப்பி வைத்துள் ளார்கள். இத்துடன் கடந்த மாதம் வேறு ஆலைகளில் இருந்து கழிவுப்பாகுக ளைப் பெற்று இயக்கிய எரிசாராய ஆலையின் உற்பத்தியும் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமராவதி சர்க்கரை ஆலையை இயக்காமல் இருப்பது இந்த ஆலையை தனியாருக்குத் தாரைவார்க்கும் நோக்கம் கொண்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநிலத்தின் முதல் கூட்டுறவு சர்க் கரை ஆலையை நவீனப்படுத்த சுமார் ரூ.80 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி ஆலையை மீண்டும் அரசே நடத்தும், ஆலையை தனியாருக்குத் தரப்படாது என்ற அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டால் மட்டுமே விவசா யிகளுக்கு நம்பிக்கை ஏற்படும்.