districts

img

குறுகிய கால பயிர்களுக்கு தயாராகும் விவசாயிகள்

நாமக்கல், மே 30- தொடர் மழைப்பொழிவு உள்ளதால் விவ சாய நிலங்களில் குறுகிய கால பயிரினங் களை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், முழுவதும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயில் வாட்டி  வதைத்த நிலையில், மே மாத துவக்கத்தி லிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் வெப்பநிலை மாறி மழை பெய்ய தொடங் கியது. இதன் காரணமாக கணிசமான அள வில் மேட்டூர் அணையில் நீர் நிரம்பியுள்ளது. மேலும், மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கா லில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தண் ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் விவசா யம் செய்ய முடியாத நிலை உண்டானது. தற் போது, பெய்து வரும் தொடர் மழையால் குறு கிய கால பயிரினங்களை பயிர் செய்திட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணியில் உற்சாகத்துடன் ஈடுட்டுள்ளனர்.

;