districts

img

வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், டிச.29- உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில்  வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என விவ சாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில்  தமிழ்  நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வெள்ளியன்று ஆட்சியர்  அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் துணைத் தலைவர் எ.பாலதண்ட பாணி பேசுகையில், உடுமலைப் பேட்டை உழவர் சந்தையில் நிர்வாக அதிகாரியாக உள்ள சீனிவாசன் விவசா யிகள் மீது வீண் புகார்கள் கூறுவது, பணம் வசூலிப்பது, மோசமான முறை யில் விவசாயிகளை நடத்துவதால் விவ சாயிகள் உழவர் சந்தைக்கு வருவது இல்லை என்று மாவட்ட வேளாண்மை நலத்துறைக்கு புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. அதைக் கவனத்தில் கொண்டு முறை கேடுகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமராவதி சக்கரை  ஆலையைப் புனரமைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். உடுமலைப்பகுதி யில் எந்த குளம், குட்டைகளிலும்  தண் ணீர் இல்லை. குறிப்பாக உடுமலைப் பேட்டை தாலுகாவில், சர்க்கார்புதூர் பீச்சான் குட்டை, ரெட்டியபாளையம் குட்டை, பெரியவாளவாடி நடுக் குட்டை, மற்றும் சப்டியார் குட்டை, பெரி சனம்பட்டி மாரியம்மன் கோவில் குட்டை, மங்களாபுரம் குட்டை, பாப்ப னூத்து செங்குட்டை,  தேவனூர்புதூர் நவக்கிரக பள்ளக்குட்டை, நவக்கிரக ஓடையில் மண்ணெடுத்தல், உடுக்கம் பாளையம் கோவில் குட்டை, உட்பட்ட  நீர்நிலைகளிலும், மற்றும் மாவட்டங்க ளில் உள்ள குளம் குட்டைகளில் வண் டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண் டும் எனக் கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய கொடிங் கியம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் சின்னச்சாமி, தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தொழி லாளர்களைப் பயன்படுத்தி பிஏபி முத லாம் மண்டல கால்வாயை தூர்வார நட வடிக்கை எடுக்க வேண்டும் என கூறி னார். இக்கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனு வில் கூறியிருப்பதாவது, பெரியவாள வாடியிலிருந்து - சர்க்கார்புதூர் கிரா மத்துக்கு இணைப்பு சாலையை தார்ச் சாலையாக மாற்றித்தர வேண்டும். பெரி யவாளவாடி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்த மான நிலம் 31 ஏக்கர் உள்ளது. இந்த  நிலத்தைப் பிரித்து 2 ஏக்கர், 3 ஏக்கராக பொது ஏலத்திற்கு விட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து கோயில் பரா மரிப்பு செய்ய வேண்டும். மேலும் இத னால் அப்பகுதி விவசாயிகளும் பயன்  பெறுவார்கள், கோவில் பணிகளும்  சிறப்பாக நடைபெறும். சோமவாரப் பட்டி ஊராட்சி அண்ணா நகர் பகுதிக்கு  செல்லும் பொதுப்பாதையின் பெரும்  பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளது தொடர்பாக அப்பகுதி மக்கள் மனு  அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக் கப்படாமல் உள்ளது. அந்த ஆக்கிரமிப் புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய்  அலுவலர் த.ப.ஜெய்பீம், இணை இயக் குநர் (வேளாண்மை) மா.மாரியப்பன், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங் கள்) சொ.சீனிவாசன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத் துத்துறை அலுவலர்கள், விவசாயச் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயி கள் கலந்து கொண்டனர்.