districts

img

கிட்டிப் புள்ளு அமைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம்

கோபி, பிப்.15- கோபி தடப்பள்ளி பாசன பகுதி யில் நெல் பயிர்களில் எலி கடி தாக்கு தலை கட்டுப்படுத்த கிட்டிப் புள்ளு அமைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அடுத்த கொடிவேரி தடுப் பணையின் இருகரைகளிலும் தடப் பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய இரு வாய்க்கால் பாசனங்கள்  உள்ளன. கொடிவேரி தடுப்பணையிலி ருந்து கடந்த டிசம்பர் மாதம் தடப் பள்ளி - அரக்கன்கோட்டை பாசன  வாய்கால்களுக்கு, நெல் சாகுப டிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கோபி, அந்தியூர், பவானி  ஆகிய மூன்று தாலுகாக்களில் உள்ள 24ஆயிரத்து 500ஏக்கர் விவ சாய நிலங்களில் நெல், வாழை உள் ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப் பட்டு வருகின்றன.  இந்நிலையில், பாசனப் பகுதியில் நெல் வயல்களில் நடவுகள் எடுக்கும்  பணிகள் நிறைவுற்று நெற்பயிற் கள் கதிர் விடும் நிலையில் உள்ளது.  தற்போதைய சூழலில் சாகுபடி செய் துள்ள நெற்பயிர்களை எலிகள் கடித்து சேதப்படுத்துவதால், எலிக ளுக்கு மருந்து தெளிக்காமால் எலி களை பிடிக்க, புதுக்கரைபுதூர், பாரி யூர், கணபதிபாளையம், கூகலூர், மேவாணி உள்ளிட்ட பல்வேறு பகுதி யில் 50க்கும் மேற்பட்ட கிட்டிப் புள்ளு  அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இதில் ஒரு ஏக்கருக்கு 100 கிட்டி கள் முதல் 150கிட்டிகள் வரை அமைக் கப்படுகின்றன. கிட்டிப் புள்ளு அமைப்பதால் எலிகளுக்கு மருந்து தெளிக்கும் செலவு குறைகிறது. மேலும் விவசாய பயிர்கள் நச்சு தன்மை குறைந்து மருந்தில்லா நெல்  சாகுபடி செய்ய வழிவகை செய்கி றது. விவசாய பயிர்களில் எலி தாக்கு தலை கட்டுபடுத்த மருந்து தெளிக்கா மல் கிட்டிகள் வைப்பதில் விவசாய கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.