districts

img

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வாகன பேரணி

தருமபுரி, ஜன.27- விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன் னணி சார்பில், ஞாயிறன்று வாகன பேரணி நடைபெற்றது. விவசாயிகளின் விளை பொருட்க ளுக்கு கட்டுப்படியான விலை வேண் டும். விவசாயிகளின் கடனை முழுமை யாக தள்ளுபடி செய்ய வேண்டும். பஞ் சாப் மாநிலம், கனௌரியில் போராடிக்  கொண்டிருக்கிற ஜக்த்சிங் தல்லேவால் உயிரை காப்பாற்ற வேண்டும். விவ சாயிகள் உற்பத்தியாளர்களுக்கான தேசிய சந்தைப்படுத்துதல் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, குடி யரசு தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று தருமபுரி மாவட்டம், அரூரில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் ஏ.நேரு தலைமை வகித்தார். ஐக் கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோ.அருச்சுனன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் கே.என்.மல்லையன், எஸ்.தீர்த்தகிரி, மாவட்டப் பொருளா ளர் சி.வஞ்சி, அகில இந்திய விவசாயி கள் மகா சபா மாவட்ட நிர்வாகி கோவிந்த ராஜ், விவசாயிகள் விடுதலை முன்னணி நிர்வாகி ராமலிங்கம், தமிழ்நாடு கூலி  விவசாயிகள் சங்க நிர்வாகி கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அருகே உள்ள பல்லாக்காபாளை யத்தில் விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் சார்பில் வாகனப் பேரணி நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் சி.துரைசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்த லிங்கம் பேரணியை துவக்கி வைத்தார். இதில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ரேவதி, கோவிந்தசாமி, சி.முருகன், கொளந்தா கவுண்டர், கந்தசாமி, சின்னத் தாயி, லட்சுமி அமராவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நடேசன் நன்றி கூறினார். இதேபோன்று, நாமக் கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி உள்ளிட்ட பல்வேறு இயக் கங்கள் நடைபெற்றன. சேலம் சேலம் மாவட்டம், ஆத்தூரில் டிராக் டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி  நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில துணைத்தலை வர் பி.டில்லிபாபு, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஏ.ராமமூர்த்தி, ஐக்கிய விவசாயி கள் சங்க தலைவர் சங்கரய்யா, நிர்வாகி கள் எம்.சரவணன், கோவிந்தன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்  தலைவர் ஏ.அன்பழகன், துணைத்தலை வர் நடராஜன், விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் வி.அய்யந்துரை, ஏஐ கேகேஎம்ஸ் மாவட்ட அமைப்பாளர் ஆர்.நடராஜன், விவசாயிகள் நலச் சங்க நிர்வாகி கோவிந்தராஜ் உட்பட  ஏராளமான வாகனங்களுடன் விவசா யிகளும், விவசாயத் தொழிலாளர்க ளும் கலந்து கொண்டனர்.