districts

img

வேளாண் நிலத்தில் வனத்துறை மரக்கன்று நடுவதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக். 12- வேளாண் நிலங்களில்  வனத்து றையினர் செடிநடுவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பென்னாகரம் வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் பென்னா கரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏமனூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் மேட்டூர் அணைக்காக தங்களது நிலங்களை வழங்கிவிட்டு ஏம னூர், தொன்னைகுட்டஅள்ளி கிரா மங்களுக்கு குடி பெயர்ந்து வந்துள் ளனர். வேளாண் சாகுபடி நிலத் தில் விவசாயம் செய்து வந்தனர். கடந்த இரண்டு வருடமாக வனத்து றையினர் இந்த மக்களை விவசா யம் செய்யக்கூடாது என்றும் இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமா னது என்றும் கூறி அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். மேலும் அவர்கள் விவசாயம் செய்யும் நிலங்களில் வனத்துறையினர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு ஏரியூர் ஒன்றி யச் செயலாளர்  தங்கராஜ் தலைமை வகித்தார். விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அருச்சு ணன்,  மாவட்டத் தலைவர்  எம். குமார் மாவட்டத் துணைச் செயலா ளர்  ஆ.ஜீவானந்தம், கே.அன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்  சிசுபா லன் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்  மாதன் ஏரியூர் ஒன்றியச் செய லாளர்  முருகன், நாகமலை முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோவன், பென்னாகரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.சக் திவேல், பென்னாகரம் பகுதி குழுச் செயலாளர் வி.ரவி, ஏமனூர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கண் டன உரையாற்றினர். இதில் ஏமனூர் தொன்னகுட்ட அள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.